I


516திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுபி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே"

என்னும் புறப்பாட்டு இங்கு நோக்கற் பாலது. முறையாவது இஃதென்பதனை,

"ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை"

என்னும் திருக்குறளா னறிக. (2)

கரியவன் கமலச் செம்மன் மறைமுதற் கலைகள் காண்டற்
கரியவ னன்பர்க் கென்று மெளியவ னாகு மேன்மை
தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் றனக்குங் கற்பிற்
குரியவ டனக்குங் காதன் மகளென வுமையைத் தந்தான்.

     (இ - ள்.) கரியவன் கமலச் செம்மல் மறை முதல் கலைகள் காண்டற்கு அரியவன் - திருமாலும் தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் வேதம் முதலிய
கலைகளும் காணுதற்கு அரியவனும், என்றும் அன்பர்க்கு எளியவன் ஆகும்
மேன்மை - எஞ்ஞான்றும் அன்பர்களுக்கு எளியவனுமாகிய (தனது)
பெருமையை, தெரிய - அனைவரும் அறியுமாறு, அன்பு அகன்று சிந்தை
தென்னவன் தனக்கும் - அன்பு பெருகிய உள்ளத்தினை யுடைய மலயத்துவச
பாண்டியனுக்கும், கற்பிற்கு உரியவள் தனக்கும் - அவன் கற்பினுக்கு
மனைவியாகிய காஞ்சன மாலைக்கும், உமையை மகள் எனத் தந்தான் -
உமாதேவியைப் புதல்வியாகுமாறு அருளினான் எ - று.

     இறைவன் இங்ஙனம் அரியனும் எளியனுமாம் தன்மையை,

"மூவராலு மறியொ ணாமுத லாய தானந்த மூர்த்தியான்
யாவராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான்"

என்னும் திருவாசகத்தாலும் அறிக.

"தன்னடியார்க், கென்று மெளிவரும் பெருமை
யேழுலகு மெடுத்தேத்தும்"

எனத் திருத்தொண்டர் புராணங் கூறுவதும் ஈண்டுச் சிந்திக்கற் பாலது.
அரியனாகியும் என விரித்தலுமாம். அகன்ற - விரிந்த, "அஃகி யகன்ற வறிவு"
என்புழப் போல. (3)

மற்றதற் கிசையத் தானு மருமக னாகி வையம்
முற்றும்வெண் குடைக்கீழ் வைக முறைசெய்தா னாக மூன்று
கொற்றவர் தம்மிற் றிங்கட் கோக்குடி விழுப்ப மெய்தப்
பெற்றது போலு மின்னும் பெறுவதோர் குறைவு தீர்ப்பான்.