I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்549



நீற்ற திருநிற்றினயணிந்த நெறறியினரும் ஆகிய வானப் பிரத்தர்கள்,
இல்லொடு நண்ணினார் - மனைவியரோடும் வந்து சேர்ந்தார்கள் எ - று.

     நீர்க்கலம் - நீரினையுடைய கமண்டலம்; இது கரகமெனவும்
குண்டிகையெனவும் படும்; இதனை உறியின்கண் வைத்து எடுத்துச் செல்வர்.
தோள்காறும் தொங்குமாறிட்டவென்க. வேட்ட என்பது வேட்கும் கருவியாகிய
வென்னும் பொருளில் வந்தது. தீத்தொட்ட கோல் - தீப்பொருந்திய கோல்;
தீக்கடைபோல். வானப்பிரத்தராவார் இல்லை விட்டுத் தீயொடு வனத்தின்கட்
சென்று மனைவி வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தினையுடையார். (22)

முண்ட நெற்றியர் வெண்ணிற மூரலர்
குண்டி கைக்கையர் கோவணம் வீக்கிய
தண்டு கையர்கற் றானையர் மெய்யினைக்
கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார்.

     (இ - ள்.) முண்டம் நெற்றியர் - திருநீ றணிந்த நெற்றியினரும், வெள்
நிற மூரலர் - வெள்ளிய நிறத்தினையுடைய பல்லினரும், குண்டிகை கையர் -
கமண்டல மேந்திய கையினரும், கோவணம் வீக்கிய தண்டு கையர் -
கோவணம் யாத்த கோலினை யேந்திய கையினரும், கல் தானையர் -
கல்லாடையினரும், மெய்யினைக் கண்டு பொய்யினைக் காய்ந்தவர் -
மெய்ப்பொருளை யுணர்ந்து பொய்ப் பொருளை வெறுத்தவரும் ஆகிய
துறவினர், நண்ணினார் - வந்து சேர்ந்தார்கள் எ - று.

     மூரல் - புன்னகையுமாம். கற்றானை - காவிக்கற் குழம்பிற் றோய்த்த
ஆடை;

"கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்"

என்பது முல்லைப்பாட்டு. பொய்யாவன நிலையில்லாதன. துறவினராவார்
முற்றத் துறந்த யோக வொழுக்கத்தினர்; சன்னியாசிகள். (23)

தீந்தண் பாற்கடல் செந்துகிர்க் காட்டொடும்
போந்த போன்மெயிற் புண்ணியப் பூச்சினர்
சேந்த வேணியர் வேத சிரப்பொருள்
ஆய்ந்த கேள்வி யருந்தவ ரெய்தினார்.

     (இ - ள்.) தீந்தண்பால் கடல் செந்துகிர்க் காட்டொடும் போந்த போல்
- இனிய குளிர்ந்த பாற்கடலானது சிவந்த பவளக்காட்டொடும் வந்ததுபோல்,
மெய்யில் புண்ணியப் பூச்சினர் - மேனியில் திருநீறு தரித்தவரும், சேந்த
வேணியர் - சிவந்த சடையினை உடையவரும் ஆகிய, வேத சிரப்பொருள்
ஆய்ந்த கேள்வி - உபநிடதப் பொருளை ஆராய்ந்த கேள்வியையுடைய,
அருந்தவர் எய்தினார் - அரிய தவத்தினையுடைய சைவ முனிவர்கள் வந்து
சேர்ந்தார்கள் எ - று.

     நீறு பூசிய திருமேனிக்குப் பாற்கடலும், செஞ்சடைக்குத் துகிர்க்காடும்
உவமம்; புண்ணியம் நீறாதல்.