I


636திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பன்னிரு விரல்மேல் விளங்கிய தலம் 0என்று - முடியின்மேல் பன்னி
ரண்டங்குலத்துக்கு மேலாக விளங்கிய தலம் என்றும், எண் இல் வானவர்
முனிவோர் முயன்று மாதவப்பயன் அடைந்து - அளவிறந்த தேவர்களும்
முனிவர்களும் நோற்றுப் பெரிய தவப்பயனை எய்தி, சித்தம் மாசு அகன்று
சீவன் முத்தராய் வதிவது என்று - மனக் குற்றங்கள் நீங்கிச் சீவன் முத்தராய்
வசிக்கப் பெறுவது என்னும், அற நூல் செப்பிய மதுரை - தரும நூல்கள்
எடுத்துக்கூறும் மதுரைப் பதியாம்; அந்நகரில் - அத் திருப்பதியிலே எ - று.

     அது என்பதனை யாதெனில் அது எனக் கூட்டி யுரைக்க : அகிலம் -
எல்லாம். பன்னிரு விரன்மேல் விளங்கிய தலம் - துவாதசாந் தத்தலம்; தல
விசேடத்திற் காண்க. என்று என்பது முன்னுங் கூட்டி யுரைக்கப்பட்டது. (8)

தெளிதரு விசம்பி னிழிந்ததோர் விமான
     சிகாமணி யருகுதென் மருங்கின்
முளிதரு பராரை வடநிழல் பிரியா
     முழுமுதல் வழிபடு மறவோர்க்
களிதரு கருணை முகமலர்ந் தளவா
     வருங்கலை யனைத்தையுந் தெளிவித்
தொளிதரு மனைய மூர்த்தியே நுங்கட்
     கோதிய மறைப்பொரு ளுணர்த்தும்.

     (இ - ள்.) தெளிதரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி
அருகு - தெளிந்து வானினின்றும் இறங்கியதாகிய ஒப்பற்ற
விமானங்களுக்கெல்லாம் சூளா மணியாயுள்ள விமானத்தின் அருகில், தென்
மருங்கில் - தென்பாலில், முளிதரு பராரை வடநிழல் பிரியா முழு முதல் -
உலர்ந்த (பொருக்குள்ள) பருத்த அரையையுடைய கல்லால மரத்தி
னிழலினின்றும் நீங்காத முழுமுதற் கடவுள், வழிபடும் அறவோர்க்கு -
வழிபடாநின்ற முனிவர்க்கு, அளிதரு கருணை முகம் மலர்ந்து - முதிர்ந்த
கருணையுடன் முகமலர்ச்சியுற்று, அளவா அருஙகலை அனைத்தையும்
தெளிவித்து - அளவிறந்த அரிய நூல்கள் அனைத்தையும் தெளிவுறுத்தி,
ஒளி தரும் - விளங்கா நிற்பர்; அனைய மூர்த்தியே - அச்சிறந்த தென்முகப்
பெருமானே, ஓதிய மறைப்பொருள் நுங்கட்கு உணர்த்தும் - (தாம்) அருளிய
வேதத்தின் பொருளை உங்கட்கு அறிவிப்பர் எ - று.

     விமான சிகாமணி - விமானங்கள் முடியிற் றரிக்கும் மணிபோலும்
சிறப்புடையது. பருஅரை பராரை யென்றாயது. அரை - அடிமரம். வடம் -
ஆல். அறவோர் - சனகர் முதலிய முனிவர். அளிதல் - முதிர்தல்; அளிதரு
கருணை என்பதற்கு அன்பு பெற்ற அருள் என்று கூறுவது ஈண்டுச்
சிறப்பின்று. அளவில்லாத என்பது அளவா என நின்றது. ஒளிதரும் -
ஞானத்தைத் தரும் என்றுமாம். (9)

அங்கவன் றிருமு னருந்தவ விரத
     மாற்றுவான் செல்லுமி னெனவப்
புங்கவ னருள்போல் வந்தமா தவன்பின்
     புனிதமா முனிவரு நங்கை