I


638திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



விரைந்துபோய், நான்கு இரு வெள்ளி வரைகள் தம்பிடரில் கிடந்தது ஓர்
மேருவரை புரை விமானம் மேல் - எட்டு வெள்ளிமலைகளின் பிடரியிலே
தங்கியதாகிய ஒரு பொன்மலையைப் போலும் விமானத்தின்கண், காணா
உரைகள் தம்பொருளைக் கண்களால் கண்டாங்கு - தம் அகக்கண்ணாற்
காணக்கூடாத மறைகளின் பொருளைப் புறக்கண்ணாற் கண்டது போல,
உம்பர் தம்பிரானை நேர் கண்டு - தேவ தேவனாகிய சொக்கலிங்கக்
கடவுளை நேரிற்பார்த்து, திரை கடந்திடும் பேரின்ப வாரியிலும் சேண்
நிலத்திலும் விழுந்து எழுந்தார் - அலை யொழிந்த பேரின்பக் கடலினும்
சேய்மை யாகிய நிலத்தினும் விழுந்து எழுந்தார்கள் எ - று.

     எட்டு வெள்ளை யானைகளால் தாங்கப்பட்டிருக்கும் பொன் விமானம்
எட்டு வெள்ளி மலைகளின் மேற் பொருந்தியமேரு மலையை ஒக்கு மென்றார். உரைகள் என்றது வேதங்களை யுணர்த்திற்று; ‘அவற்றின் பொருணிலை
தெரியா துள்ளமுமுகமும் புலர்ந்தனர்’ என மேலே கூறினராகலின், ஈண்டு
அங்ஙனம் காணப்படாப் பொருளையே கண்களாற் கண்டாங்குப் பிரானை
நேர்கண்டு என்றார். விமான மேற்கண்டு என இயையும். முழு நிறைவுடைத்
தாகலின் ‘திரை கடந்திடும்’ என்றார்;

"திரை பொரா மன்னும் அமுதத் தெண் கடலே"

என்னும் திருவாசகமும் நோக்குக; திரைகள் தந்திடும் எனப் பிரித்தல்
பொருந்து மேனுங் கொள்க. நிலத்திலும் வாரியிலும் ஒருங்கு விழுந் தாராகக்
கூறியது ஓர் அணி கருதிற்று. வரைகடம், உரைகடம் என்ப வற்றில் தம்
சாரியை. (11)

கைதலை முகிழ்த்துக் கரசர ணங்கள்
     கம்பிதஞ் செய்துகண் ணருவி
பெய்தலை வெள்ளத் தாழ்ந்துவாய் குழறிப்
     பிரமன்மா லின்னமுந் தேறா
மைதழை கண்ட வெள்ளிமன் றாடும்
     வானவர் நாயக வானோர்
உய்தர விடமுண டமுதருள் புரிந்த
     வுத்தம போற்றியென் றேத்தா.

     (இ - ள்.) கைதலை முகிழ்த்து - கைகளைத் தலைமேற் குவித்து, கர
சரணங்கள் கம்பிதம் செய்து - கைகளும் கால்களும் நடுங்கப்பெற்று, கண்
அருவி பெய்து - ஆனந்தக் கண்ரீாகிய அருவியைப் பொழிந்து, அலை
வெள்ளத்து ஆழ்ந்து - அலை வீசுகின்ற அவ் வெள்ளத்தில் மூழ்கி,
வாய்குழறி - நாத்தடுமாறி, பிரமன் மால் இன்னமும் தேறா மைதழை கண்ட
- பிரமனும் திருமாலும் இன்னமும் காணப்பெறாத கருமை மிக்க திரு
மிடற்றை யுடையவனே, வெள்ளிமன்று ஆடும் வானவர் நாயக -
வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடி யருளும் தேவதேவனே, வானோர் உய்தர
விடம் உண்டு அமுது அருள்புரிந்த உத்தம - தேவர்கள் (உயிர்)
பிழைக்குமாறு நஞ்சினை அருந்தி அமுதத்தை அளித்தருளிய உத்தமனே,
போற்றி - எங்களைக் காத்தருள்க, என்று ஏத்தா - என்று துதித்து எ - று.