(இ
- ள்.) தண்பணை - குளிர்ந்த மருத நிலங்களில், நெல் கரும்பு
என - நெய்பயிர்கள் கரும்புகள் எனவும், கரும்பு உலாம் - கரும்புகள்
அனைத்தும், நெடு கமுகு என - நீண்ட கமுக மரங்கள் எனவும், வர்க்கம்
வான் கமுகு - இனமாகிய உயர்ந்த கமுகமரங்கள், ஒலிகலித் தெங்கு என
- தழைத்த நெருக்கிய தென்னை மரங்கள் எனவும், வளர்ந்த - ஓங்கிய,
பொன்கவின் குலைத்தெங்கு - பொன்போலும் அழகிய குலைகளையுடைய
தென்னைமரங்கள், கார்ப்பந்தரை - முகிலாகிய பந்தரை, பொறுத்து நிற்கு -
சுமந்து நிற்பதற்கு, நாட்டிய கால் என - நாட்டப் பட்ட கால்கள் எனவும்
(கருதும்படி), நிவந்த - உயர்ந்துள்ளன எ - று.
ஒலி
- தழைத்தல்; இஃதிப்பொருட்டாதலை ஒலி நெடும்பீலி என
நெடுநல்வாடையினும், வணரொலியையும் பாலாய்
எனக் கார்நான்பதினும்
வருதலானறிக. கலி - செருக்குதல்; இதனை, மலைபடுகடாத்துள்,
"தீயி னன்ன வொண்செங் காந்தட்
டுவற்கலிதத புதுமுகை" |
என்பத னுரையானறிக.
வளர்ந்த வென்பது தெங்கிற்கு அடை. நிவந்த,
அன்பெறாத பலவின்பால் முற்று. தண்பணை யென்பதில் ஏழனுருபு
இறுதிக்கட் டொக்கது;
"ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யு ருபுதொகா விறுதி யான" |
என்பது தொல்காப்பியம்.
ஏ, அசை. (6)
சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக்
கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி
உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குதவி
நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை. |
(இ
- ள்.) நிழல் மலர்ச்சோலை - குளிர்ந்த மலர்களையுடைய
சோலைகளின் (தோற்றம்), சிவந்தவாய் - சிவந்தவாயினையும், கரும் கயல்
கணாள் - கரிய கயல்மீன்போலும் கண்களையுமுடைய தடாதகைப்
பிராட்டியார், வலாரியைச் சீறிக் கவர்ந்த - இந்திரனைக் கோபித்துக்
கொணர்ந்த, வான்தருக் குலங்களே - உயர்ந்த பஞ்சதருக் கூட்டங்களே,
கடிமணம் வீசி - மிக்க மணத்தினை வீசி, வேண்டினர்க்கு - குறை
யிரந்தார்க்கு, வேறு பல் பலங்களும் - வேறாகிய பல பயன்களையும்,
உவந்து உதவி - மகிழ்ந்து கொடுத்து, நிவந்த - உயர்ந்துள்ள, காட்சியே
போன்றது - தோற்றத்தையே ஒத்தது எ - று.
வலாரி
- வலன் என்னும் அசுரனுக்குப் பகைவன் இந்திரன்.
தருக்கள் : சந்தானம், அரிசந்தனம, மந்தாரம், பாரிசாதம், கற்பகம் என்பன.
குலம் - கூட்டம். கடிமணம் - மிக்க மணம் : ஒருபொருளிருசொல். வேறு
வானுலகத்து வழங்கிய ஆடை அணி முதலியவற்றின் வேறாகிய; வெவ்வேறு
பல என்னலுமாம். பலம் - பழம்; பழம் என்னும் தமிழ்ச்சொல் நெடுநாளின்
முன் ஆரியத்திற் பலமெனத் திரிந்தேறியது. ஏ : இரண்டும் பிரிநிலை.
தடாதகைப் பிராட்டியார் இந்திரனைச் சீறித் தருக்களைக் கவர்ந்து
வந்ததனை இப்புராணத்தே திருமணப்படலத்திற்
காண்க. (7)
|