II


பழியஞ்சின படலம்101



சிறிது - சில. அரசிருக்கை - அரியணை. வினையெலாம் வென்று -
வினைகளை எஞ்சாமற் கெடுத்து. கழல் : ஆகுபெயர். இரண்டறக்
கலந்தென்பார் ‘பின்னிக் கலந்து’ என்றார். (2)

குரவன்செங் கோல்கைக் கொண்ட குலோத்துங்க வழுதி
செங்கண் அரவங்கம் பூண்ட கூட லாதிநா யகனை நித்தம்
பரவன்பின் வழிபா டானாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவஞ்சுங் கதுப்பி னல்லா ரீரையா யிரவ ருள்ளான்.

     (இ - ள்.) குரவன் செங்கோல் கைக்கொண்ட குலோத்துங்க வழுதி -
தந்தையினது செங்கோலைக் கையிற்கொண்ட குலோத்துங்க பாண்டியன்,
செங்கண், அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை - சிவந்த
கண்களையுடைய பாம்புகளைத் திருமேனியில் அணிந்த மதுரையில்
எழுந்தருளிய சோமசுந்தரக்கடவுளை, நித்தம் அன்பின் பரவு வழிபாடு
ஆனாப் பத்திமை நியமம் பூண்டான் - நாடோறும் அன்பினாற் பூசிக்கும்
வழிபாடாகிய நீங்காத பத்தி நியமத்தை மேற்கொண்டவன்; இரவு அஞ்சும்
கதுப்பின் நல்லார் ஈரையாயிரவர் உள்ளான் - இருளும் அஞ்சுங்
கூந்தலையுடைய மனைவியர் பதினாயிரவரை யுடையவன்.

     குரவன் - தந்தை. அரவினையும் என்பினையும் அணிந்த என்றுமாம்.
வழிபாடாகிய நியமம் என்க. நியமம் - செய்கடன். பூண்டான்; அவன்
உள்ளவனாயினான்; என முற்றாக வுரைத்தலுமாம். கூந்தலின் கருமைக்கு
முன்னிற்கலாற்றாது இரவும் அஞ்சு மென்க.
(3)

[கொச்சக்கலிப்பா]
அப்பதினா யிரவர்க்கு மொவ்வொருத்திக் கவ்வாறாய்
ஒப்பரிய வறுபதினா யிரங்குமர ருளரவருட்
செப்பரிய வல்லாண்மைச் சிங்கவிள வேறனையான்
வைப்பனையான் முதற்பிறந்த மைந்தன்பே ரனந்தகுணன்.

     (இ - ள்.) ஒவ்வொருத்திக்கு அவ்வாறாய் - ஒவ்வொரு மனைவிக்கும்
ஆறு ஆறாக, அப்பதினாயிரவர்க்கும் - அந்தப் பதினாயிரம் மகளிர்க்கும்,
ஒப்பு அரிய அறுபதினாயிரம் குமரர் உளர் - ஒப்பில்லாத அறுபதினாயிரங்
கமரர்கள் உளராயினார்; அவருள் - அக்குமரருள்? மதல் பிறந்த மைந்தன் -
முதலிற் றோன்றி புதல்வன், செப்பு அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு
அனையான் - சொல்லுதற்கரிய வலிய ஆண்மையையுடைய இளமை
பொருந்திய ஆண்சிங்கத்தை ஒத்தவன்; வைம்பு அனையான் - வைப்பு
நிதியைப் போன்றவன்; பேர் அனந்த குணன் - அவன் பெயர்
அனந்தகுணன்.

     ஒருத்தி, ஆறு என்பன இரட்டித்த வழி ஒவ்வொருத்தி, அவ்வாறு
என்றாயின; "எண்ணிறையளவும்" "ஒன்ப தொழித்தவெண் ணொன்பது
மிரட்டின்" என்னும் நன்னூற் சூத்திரங்கள் நோக்குக. ஆக்கச்
சொற்கொடுத்து உளராயினார் என விரிக்க. வல்லாண்மை - மிக்க
ஆண்மை. (4)