II


164திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



(அவ்வில்லின்) இரண்டு தலையையும் வளைத்து, எரிமுகக் கூர்ங்கணை
தொடுத்து விடுத்தனன் - கூரிய தீ முகக் கணைகளைப் பூட்டி விடுத்தனன்;
விடுத்த சரம் எலாம் - (அங்ஙனம்) விடப்பட்ட கணைகளனைத்தையும்,
உரகன் வெறுந்துகள்படக் கறித்து உமிழ்ந்து படுத்தனன் - பாம்பின் வடிவாய
அவுணன் வெறிய தூளாமாறு கடித்து உமிழ்ந்து சிதைத்தான்; பஞ்சவன் -
(அதனைக் கண்ட) பாண்டியன், பொறாது - மனம் பொறாமல், புராரி பங்கயச்
சேவடி நினையா - சோம சுந்தரக் கடவுளின் தாமரை மலர் போன்ற சிவந்த
திருவடிகளைச் சிந்தித்து.

     எடுத்து வணக்கி நாணிலே கணை தொடுத்து என்றுமாம். அடுத்தனன்,
எடுத்தனன் என்பன முற்றெச்சம். புராரி - புரப்பகைவன்; முப்புரங்களை
யெரித்தவன். (16)

கொடியதோர் பிறைவா யம்பினை விடுத்துக்
     கோளரா வளையுட றுணித்தான்
இடியதோ வெனவார்த் தெரிநிறக் குருதி
     யிரங்கிவீ ழருவியிற் கவிழ
நெடியதோ ருடலம் புரள்படக் கூர்வா
     னெளிதர விளிபவன் மேலைக்
கடியதோ ரால காலவெள் ளம்போற்*
     கக்கினான் கறையிரு ணஞ்சம்.

     (இ - ள்.) கொடியது ஓர் பிறை வாய் அம்பினை விடுத்து -
கொடியதாகிய ஒரு பிறை போலும் வாயினையுடைய கணையை எவி, கோள்
அரா வளை உடல் துணித்தான் - வலிய பாம்பினது நெளிந்த உடலைத்
துண்டுபடுத்தினான்; இடியதோ என ஆர்த்து - இடியொலியோ என்று ஐயுறப்
பேரொலி செய்து, எரி நிறக்குருதி - தீயின் நிறம் போன்ற குருதி, இரங்கி
வீழ் அருவியில் கவிழ - ஒலித்து வீழ்கின்ற அருவி போல ஒழுகவும்,
நெடியது ஓர் உடலம் புரள்பட - நீண்டதாகிய ஒப்பற்ற உடல் புரளவும்,
கூர்வால் நெளிதர - கூரியவால் நெளியவும், விளிபவன் - இறக்கின்ற
அவ்வவுணன், மேலைக் கடியது ஓர் ஆலகால வெள்ளம் போல் -
முன்னாளிற்றோன்றிய கடியதாகிய ஒப்பற்ற ஆலகால நஞ்சின் பெருக்குப்
போல், கறை இருள் நஞ்சம் கக்கினான் - கரிய இருள் போன்ற நஞ்சினைக்
கக்கினான்.

     இடியதோ, அது : பகுதிப் பொருள் விகுதி. கொடியது, நெடியது,
கடியது என்பன எச்சமாயின. ஓர் என்பன அசைகளுமாம். ஆர்த்து
விளிபவன் கக்கினான் என்க. (17)

தீவிட முருத்துத் திணியிருள் கடுப்பத்
     திருநக ரெங்கணுஞ் செறிந்த
காவிடங் கூவல் கயந்தலை சதுக்கங்
     கழகமா வணமக ழிஞ்சி

     (பா - ம்.) * ஆலாகல வெள்ளம்போலக்.