பல்விலங்கினை -
இரண்டு கொம்பினையுடைய யானை முதலிய பல
விலங்குகளையும், ஒன்றை ஒன்றாக ஞான நோக்கினால் நோக்கியும் - ஒன்று
மற்றொன்றாமாறு ஞானப்பார்வையாற் பார்த்தருளியும், நாடிய இளையோர் -
பார்த்த இளமைப் பருவத்தினையுடைய ஆடவர், மானின் நோக்கியர்
ஆகிலோமென - மான்போன்ற பார்வையினையுடைய மகளிராக நாம் பிறக்க
வில்லையே எனக் கவல, எழில் வாய்ந்தும் - கட்டழகினைப் பொருந்தியும்.
ஒன்றை
யென்பதில் ஐகாரம் சாரியை. இவனை அணைதற்கு மாதராகப்
பிறந்திலோமேயென என்க;
"ஆடவர் பெண்மையை
யவாவுந் தோளினாய்" |
என
இராமாயணங் கூறுவதுங் காண்க. இது வசியம் எனப்படும். (19)
நாக நாடுபொன்
னாட்டுள பொருளுமந் நகருள்
ஆக வாக்கியு மின்னணம் விச்சைக ளனந்தம்
மாக நாயகன் மலைமக ணாயகன் மதுரை
ஏக நாயகன் றிருவிளை யாடல்செய் திருந்தான். |
(இ
- ள்.) நாக நாடு பொன் நாடு உள பொருளும் அந்நகருள் ஆக
ஆக்கியும் - பாதலத்திலும் பொன்னுலகத்திலும் உள்ள பொருள்களும்
அம்மதுரைப் பதியில் உண்டாகுமாறு செய்தும், இன்னணம் அனந்தம்
விச்சைகள் - இங்ஙனம் அளவில்லாத வித்தைகளை, மாகநாயகன் - சிவ
லோக நாயகனும், மலைமகள் நாயகன் - பார்வதி தலைவனும், மதுரை
ஏகநாயகன் - மதுரையிலெழுந்தருளியுள்ள ஒப்பற்ற இறைவனுமாகிய
சோமசுந்தரக் கடவுள், திருவிளையாடல் செய்து இருந்தான் -
திருவிளைாயடலாகப் புரிந்து இருந்தருளினன்.
பாதலத்துப்
பொருள் பொன்னாட்டுப் பொருளாகவும் பொன்னாட்டுப்
பொருள் பாதலத்துப் பொருளாகவும் எனப் பிறர் பொருள் கூறுவாராயினர்;
சொற்கள் அதற்கேற்றவாறில்லாமை காண்க. (20)
சித்த யோகிகள்
செய்கின்ற வாடன்மேற் செலுத்தி
வைத்த கண்களுஞ் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தத்த மாள்வினைத் தொழிமறந் திருந்தனர் தகைசால்
முத்த வேதிய ராதிய முதுநகர் மாக்கள். |
(இ
- ள்.) தகைசால் முத்த வேதியர் ஆதிய முது நகர் மாக்கள் -
தகுதிமிக்க முத்தத்தன்மையையுடைய அந்தணர் முதலிய தொன்மை யுடைய
மதுரைப் பதியிலுள்ள மாந்தர்கள், சித்த யோகிகள் செய்கின்ற ஆடல்மேல்
செலுத்தி வைத்த - யோக சித்தமூர்த்திகள் செய்தருளும்
திருவிளையாடலின்மேற் செலுத்தி வைத்த, கண்களும் சிந்தையும் வாங்கலர் -
கண்களையும் உள்ளத்தினையும் மீட்க முடியாதவர்களாய், திகைத்து -
திகைப்புற்று, தத்தம் ஆள்வினைத் தொழில் மறந்திருந்தனர் - தத்தமக்குரிய
தொழில் முயற்சிகளை மறந்திருந்தார்கள் எ - று.
|