II


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்261



முப்பத்தைந்தாவது தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
சம்பு மதுரைப் பரனிரவு தனியே வந்து தனைப்பணிந்த
வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டு தாழிறுக்கி
அம்பொற் கதவின் விடைபொறித்த தறைந்துந் தென்ன                                        னடுபடைக்கு
வம்பு மலர்தோய் புனற்பந்தர் வைத்துக் காத்த வகைசொல்வாம்.

     (இ - ள்.) சம்பு மதுரைப் பரன் - சம்புவாகிய மதுரைப் சோமசுந்தரக்
கடவுள், இரவு தனியே வந்து தனைப் பணிந்த - இரவில் ஒருவனாய் வந்து
தன்னை வணங்கிய, வெம்பு கதிரோன் மருமானை - வெப்பமாகிய
கிரணத்தையுடைய சூரியன் மரபினனாகிய சோழனை, விடுத்து - அனுப்பி,
மீண்டு தாழ் இறுக்கி - திருப்பித் தாழிட்டு, அம்பொன் கதவின் விடை
யிலச்சினையிட்ட திருவிளையாடலைக் கூறினோம்; தென்னன் அடுபடைக்கு -
பாண்டியனது போர் செய்யும் படைகளுக்கு, வம்பு மலர் தோய் புனல் பந்தர்
வைத்துக் காத்த வகை சொல்வாம் - மணத்தினையுடைய மலர் தோய்ந்த
தண்ணீர்ப் பந்தர் வைத்துக் காத்தருளிய திருவிளையாடலை (இனிக்)
கூறுவாம்.

     அறைந்தும்; இறந்தகாலத் தனித் தன்மைப் பன்மைமுற்று. தண்ணீர்க்கு
மலரால் மண மூட்டுதலை,

"ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு"

     என்னும் நாலடியார்ச் செய்யுளா னறிக. (1)

தென்ன னரச புரந்தரன்கோல் செலுத்து நாளிற் காடெறிந்த
மன்னன் பின்னர் வெளிப்படையாய்ப் போந்து போந்து                                         மதுரேசன்
பொன்னங் கமலத் தாள்வணங்கிப் போவாள் முன்னிப் பொரும்பொருநைக்
கன்னி நாடன் கேண்மைபெற விடுத்தான் வரிசைக் கையுறையே.

     (இ - ள்.) தென்னன் அரச புரந்தரன் கோல் செலுத்து நாளில் -
பாண்டியனாகிய இராசேந்திரன் செங்கோல் செலுத்தும் நாளில், காடு எறிந்த
மன்னன் - காடுவெட்டிய சோழன், பின்னர் வெளிப்படையாய்ப் போந்து
போந்து - பின் யாவருமறிய வெளிப்படையாய் வந்துவந்து மதுரேசன் பொன்
அம் கமலத்தாள் வணங்கிப் போவான் கருதி - சோம சுந்தரக்கடவுளின்
அழகிய பொற்றாமரை மலர்போன்ற திருவடிகளை வணங்கிப் போகக்
கருதி, பொரும் பொருநைக் கன்னி நாடன் - கரையை மோதும்
பொருநையாற்றினை