II


288திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) நல் அறம் அதிகம் நிற்பது என்று அறிந்தனை - நன்றாகிய
அறமே சிறப்புடையதும் நிலைபெறுவதும் என்று உணர்ந்தனை; அறத்துள் -
அவ்வறங்களுள்ளே, சிவபுண்ணியம் அதிகம் ஆம் - சிவ புண்ணியங்கள்
சிறந்தனவாகும் (என்றும்), அவற்றுள் சிவார்ச்சனை அதிகம் ஆம் - அச் சிவ
புண்ணியங்களுள்ளும் சிவபூசை சிறந்ததாகும் (என்றும்), சிவபூசையுள்
அடியவர் பூசை அதிகம் என்று அறிந்து - அச் சிவ பூசையினும் அடியார்
பூசை சிறந்தது என்றும் அறிந்து, அன்பரை அருச்சனை செய்வாய் -
அடியார்களைப் பூசிப்பாயாயினை (அதனால்),

     என்று என்பதனைப் பிறவிடத்துங் கூட்டுக. ஏனை அறங்களினும் சிவ
புண்ணியம் சிவார்ச்சனைகளினும் அடியார் பூசை சிறந்ததென்பதனைப்
பின்வரும் திருமந்திரங்களால் அறிக :

"ஆறிடும் வேள்வி யருமறை நூலவர்
கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனி லோர்பிடி பேறது வாகுமே"
 
"அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞதனி பகலூண் பலத்துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே"
 
"படமாடக் கோயிற் பகவற்கொள் றீயின்
நடமாடக் கோயி னம்பர்க்கங் காகா
நடமாடக் கோயி னம்பர்க்கொன் றீயிற்
படமாடக் கோயிற் பகவற்க தாமே." (21)
 
உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப
இறுதி யில்வன் றிருவுரு வீகையாற் காணப்
பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்
அறுதி யானபல கலன்களுங் கொணர்தியென் றறைந்தார்.

     (இ - ள்.) இருமையும் உறுதி எய்தினை - இம்மை மறுமை இரண்டிலும்
பயன் பெற்றனை; உன் பெயர்க்கு ஏற்ப - பொன்னனைாள் என்னும் உன்
பெயருக்குப் பொருந்த, இறுதி இல்லவன் திரு உரு - அழிவில்லாத இறைவன்
திருமேனியை, ஈகையால் காணப் பெறுதியாக - பொன்னாற் செய்யப்
பெறுவாயாக; நின் மனைக் கிடை - நினது மனையிற் கிடக்கும், பித்தளை
ஈயம் அறுதியான பல் கலன்களும் - பித்தனையும் ஈயமு முடிவாவுள்ள பல
உலோகங்களாற் செய்யப்பட்ட கலன்களையும் கொணர்தி என்று அறைந்தார் -
கொண்டு வருவாய் என்று கூறினார்.

     ஈகை - பொன். தாழ்ந்த உலோகங்களைக் கூறி அவை முடிவாகவுள்ள
என ஏனையவற்றைத் தழுவினார். (22)