என மாறுக. வேடுருவாகி
நின்றவன் மின்னுக்கால மேனி கொண்டு வேல்
ஏந்தி நின்றான் என்க. (15)
சீறியா யிரம்ப
ரிக்கோர் சேவகன் வந்தே னென்னாக்
கூறினா னெதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு
மாறிணப் பரிக்கு மட்டோர் வயவனீ யன்றோ வெண்ணில்
ஈறிலாப் பரிக்கு மொற்றைச் சேவகன் யானே யென்றான். |
(இ
- ள்.) சீறி - சினந்து, ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் வந்தேன்
என்னா - ஆயிரம் குதிரைகட்கு ஒரு வீரனாகிய யான் வந்தேனென்று,
கூறினான் எதிர்த்தான் - சொல்லி எதிர்த்தான்; வெள்ளிக் குன்றன் - வெள்ளி
மலையையுடைய இறைவன், நீ மாறு இலா பத்து நூறு பரிக்கு மட்டு ஓர்
வயவன் அன்றோ - நீ பகைமையில்லாத ஆயிரங் குதிரைகளுக்கு மட்டும்
ஒரு சேவகன் அல்லவா, எண்ணில் ஈறு இலா பரிக்கும் - எண்ணில் முடிவு
பெறாத குதிரைகளுக்கும், ஒற்றைச் சேவகன் யானே என்றான் - ஒற்றைச்
சேவகன் யானே என்று கூறியருளினான்.
சேவகன்
எனத் தன்மையிற் படர்க்கை வந்தது. கூறினான் : முற்றெச்சம். நீ ஆயிரம் பரிக்கோர்
வீரனென இறுமாந்தாய், யானோ எண்ணில்லாத பரிக்கோர் வீரனாவேன் என இறைவனாகிய
வேடுவன் தன்னைப் புகழ்ந்து கூறினன் என்க. (16)
என்றசொல் லிடியே றென்ன விருசெவி துளைப்பக் கேட்டு
நின்றவ னெதிரே மின்று நீட்டிச்சென் மேகம் போலச்
சென்றுவேல் வலந்தி ரித்துச் செயிர்த்தன னதிர்த்துச் சீற
வன்றிற னூற்றுப் பத்து வயப்பரிக் கொருவ னஞ்சா. |
(இ
- ள்.) என்ற சொல் இடி ஏறு என்ன - என்று இறைவனாகிய வேடன் கூறிய சொல்லானது
இடியேற்றின் ஒலியைப் போல, இரு செவி துளைப்ப - இரண்டு காதுகளையுந் துளைக்க, கேட்டு
நின்றவன் எதிரே - கேட்டு நின்ற சோழனெதிரே, மின்னு நீட்டிச் செல் மேகம் போலச்
சென்று - மின்னலை நீட்டிச் செல்லும் முகில் போலச் சென்று, வேல் வலம் திரித்துச்
செயிர்த்தனன் - வேற்படையை வலமாகச் சுழற்றிச் சினந்து, அதிர்த்துச் சீற - முழங்கிச்
சீற வன்திறல் நூற்றுப் பத்து வயப்பரிக்கு ஒருவன் அஞ்சா - மிக்க வலிமையுடைய ஆயிரங்
குதிரைகட்கு ஒரு சேவகனாகிய சோழன் பயந்து.
நின்றனன்
அங்ஙனம் நின்றவனெதிரே என விரித்துரைக்க.
செயிர்த்தனன் : முற்றெச்சம், வன்றிறல் : ஒரு பொருளிருசொல். (17)
யாமினி யிந்த வேலா லிறப்பதற் கைய மில்லை
யாமென வகன்றான் மாவோ டாயிரம் பரிக்கோர் மன்னன்
காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குற் சோதி
மாமக னதுகண் டோடும் வளவனைத் துரத்திச் சென்றான். |
|