தீர்த்தங்களெல்லாம்
இருப்பனவாக நூற்கள் கூறுதலின் கோடு தோய்ந்த
புனல் குடித்தனன் என்க. அன்று, ஏ : அசை. (8)
[கலி
நிலைத்துறை]
|
ஏங்கும்
பெருமூச் செறியுங்கை யெறியுங் குன்றின்
ஓங்குஞ் சிறுகு முடுன்றார்த்திடு முன்னும் பின்னும்
பாங்குந் தொடருஞ் சிரிக்கும்பகு வாயை மெல்லும்
நீங்குங் குறுகும் பழிதாவென நேர்ந்து பற்றும். |
(இ
- ள்.) ஏங்கும் - இரங்கும்; பெருமூச்சு எறியும் - பெருமூச்சு விடும்;கை
எறியும் - கையோடு கைதாக்கும்; குன்றின் ஓங்கும் - மலை போல
வளரும்; சிறுகும் - (அணுவாகத்) தேயும்; உடன்று ஆர்த்திடும் - வெகுண்டு
ஆரவாரிக்கும்; முன்னும் பின்னும் பாங்கும் தொடரும் - முன்னிலும்
பின்னிலும் இரு பக்கங்களிலும் தொடரும்; சிரிக்கும் - நகைக்கும்; பகுவாயை
மெல்லும் - பிளந்த வாயை மெல்லும்; நீங்கும் - (சிறிது) விலகும்; குறுகும் -
(பின்) நெருங்கும்; பழிதா என நேர்ந்து பற்றும் - பழிதா என்று கூறி எதிர்ந்து
பிடிக்கும்.
அப்பழி
உருக்கொண்டு வந்து இங்ஙனமெல்லாம் செய்யா நின்றன.
பழிக்குப் பழி கொடு என்னும் பொருள்படப் 'பழிதா' என்று கூறுமென்க. (9)
மாசுண்ட தெய்வ
மணிபோற்பணி வாயிற் பட்ட
தேசுண்ட தீந்தண் மதிபோலொளி தேம்பி வண்டு
மூசுண்ட தான முகமாவுண்ட வெள்ளில் போலக்
காசுண்ட பூணா னறைபோய கருத்த னானான். |
(இ
- ள்.) மாசு உண்ட தெய்வ மணி போல் - மாசு படிந்து
(கழுவப்படாத) தெய்வத் தன்மையுடைய மாணிக்கம் போலவும், பணி
வாயில் பட்ட - இராகுவென்னும் பாம்பின் வாய்ப்பட்ட, தேசுஉண்ட தீந்தண்
மதி போல் - ஒளியிழந்த இனிய தண்ணிய சந்திரன் போலவும், ஒளி தேம்பி
- பொலிவு குன்றி, வண்டு மூசு உண்ட தானம் முகம்மா உண்ட - வண்டுகள்
மொய்க்கும் மதநீர் ஒழுகும் முகத்தினையுடைய வேழத்தால் உண்ணப்பட்ட,
வெள்ளில் போல - விளங்கனிபோல, காசு உண்ட பூணான் - மணிகள்
இழைத்த அணிகளையுடைய வரகுண பாண்டியன், அறை போய கருத்தன்
ஆனான் - உள்ளீடில்லாத மனமுடையவனானான்.
தேசுண்ட
என்பதற்கு ஒளி பொருந்திய என்றுரைத்து மதிக்கு
இயற்கையடை ஆக்கலுமாம். விளவிற்கு வருவதோர் நோய் யானை என்னும்
பெயருடையது; அப்பெயருக் கேற்பவே 'வண்டு மூசுண்ட தான முகம்' என
அடை கொடுக்கப்பட்டது; இந்நூலின், மாபாதகந் தீர்த்த படலத்தில்,
"வெருவரு வேழமுண்ட வெள்ளில் போல் வறியனாகி" என்பதன் உரையை
நோக்குக. அறை போதல் - அறிவின்றிட்பமாகிய உள்ளீடொழிதல். (10)
|