II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்363



மதுரையாக. சுந்தர மூர்த்தி - சோம சுந்தரக் கடவுள், பிராட்டியும் தானும் - உமையம்மையும் தானும், முன்பு இருந்தவாறு இருந்தனன் - முன்பு இருந்தது போலவே இருந்தருளினன்.

     தன்னவாக்குதல் - விடயங்களிற் செல்லாது தனக்கு அடங்கியிருக்கச் செய்தல். ஆக என்பது ஈறு தொக்கது. பிராட்டியும் தானும் இருந்தனன் என்றது வழுவமைதி; "தானுந்தன் றையலும் தாழ்சடையோ னாண்டிலனேல்" என்புழிப் போல. (58)

வேந்தர் சேகரன் வரகுணன் விண்ணிழி கோயில்
ஏந்தல் சேவடி யிறைஞ்சிநின் றிறையருட் பெருமை
ஆய்ந்த வாவுதன் னகம்புக வின்பமோ டன்பு
தோய்ந்து தாரைநீர் துளும்பநாக் குழறிடத் துதிப்பான்.

     (இ - ள்.) வேந்தர் சேகரன் வரகுணன் - மன்னர்கட்கு ஒரு முடி போல்பவனாகிய வரகுண பாண்டியன், விண் இழி கோயில் ஏந்தல் சேவடி இறைஞ்சி - வானினின்றும் இறங்கிய இந்திர விமானத்தின்கண் வீற்றிருக்கும் சோம சுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளைப் பணிந்து, நின்று - திருமுன் நின்று, இறை அருள் பெருமை - இறைவனது திருவருட் பெருக்கம், ஆய்ந்து அவாவு தன் அகம்புக - ஆராய்ந்து விரும்பும் தனது உள்ளத்திற் புகுந்த வளவில், இன்பமோடு அன்பு தோய்ந்து - பேரின்பத்திலும் அன்பினும் அழுந்தி, தாரை நீர் துளும்ப - கண்களில் ஆனந்த நீர் ததும்பவும், நாக்குழறிட - நாவானது குழறவும், துதிப்பான் - பரவுவானாயினான்.

     அவன் கண்ட காட்சியும் எய்திய இன்பமும் கனவுபோல் உள்ள்ததிற்றோன்ற அதனை ஆராய்ந்தவிடத்து இறைவனது திருவருட் பெருமை புலனாயினமையின் துதிப்பானாயினான் என்க. (59)

[கொச்சகக் கலிப்பா]
நாயினே னென்னை* நடுக்கும் பழியகற்றித்
தாயினே ராகித் தலையளித்தாய் தாள்சரணஞ்
சேயினேன் காணச் சிவலோகங் காட்டிப்பின்
கோயினேர் நின்றவருட் குன்றேநின் றாள்சரணம்.

     (இ - ள்.) நாயினேன் என்னை - நாய் போன்ற அடியேனை, நடுக்கும் பழி அகற்றி - வருத்துகின்ற கொலைப் பாவத்தினின்றும் நீக்கி, தாயின் நேராகி - தாயே போன்று, தலையளித்தாய் தாள் சரணம் - தலையளி செய்து ஆண்டவனே நின் திருவடிகட்கு வணக்கம்; சேயினேன் காண - நின் திருவருளுக்குச் சேய்மையிலுள்ள யானுங் கண்டுகளிக்க, சிவலோகங் காட்டி
- சிவபுரத்தைக் காண்பித்தருளி, பின் - பின்னர், கோயில் நேர் நின்ற -


     (பா - ம்.) * நாயினேன் றன்னை.