II


410திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தென்னவன் மதுரையி லிருக்குஞ் சித்தர்யாம்
நின்னிடை வந்துளே நின்னைக் கண்டுதான்
நன்னிதி வேண்டநம் மோலை கொண்டுநம்
இன்னிசைப் பாணபத் திரனிங் கெய்தினான்.

     (இ - ள்.) நிம்னிடை வந்துளேன் யாம் - நின்னிடத்து வந்துளே
மாகிய யாம், தென்னவன் மதுரையில் சித்தர் - பாண்டியனது மதுரையி
லுள்ள சித்தராவேம்; நின்னைக் கண்டு - உன்னைப் பார்த்து, நல்நிதி
வேண்ட - நல்ல பொருள் வேண்டுதற் பொருட்டு, நம் ஓலைகொண்டு
- நமது திருமுகம் பெற்றுக்கொண்டு, நம் இன்இசைப் பாணபத்திரன் -
நமது இன்னிசை பாடும் பாணபத்திரன், இங்கு எய்தினான் - இங்கு
வந்தனன். (16)

மற்றவற் கருநிதி கொடுத்து மன்னநீ
தெற்றென வரவிடு கென்று சித்தர்தாஞ்
சொற்றனர் போயினார் சுரக்குந் தண்ணளி
ஒற்றைவெண் குடையினா னுறக்க நீங்கினான்.

     (இ - ள்.) மன்ன நீ - மன்னனேநீ, அவற்கு அருநிதி கொடுத்து -
அப்பத்திரனுக்கு அரிய பொருள் கொடுத்து, தெற்றென வரவிடுக என்று -
விரைந்து வரவிடக்கடவை என்று, சித்தர் தாம் சொற்றனர் போயினார் -
சித்தமூர்த்திகள் கூறி மறைந்தனர்; சுரக்கும் தண் அளி - உயிர்களிடத்துச்
சுரந்தெழும் தண்ணிய அருளையுடைய, ஒற்றை வெண் குடையினான் -
ஒப்பற்ற வெண்குடையையுடைய சேரமான் பெருமாள், உறக்கம் நீங்கினான் -
துயிலுணர்ந்தனன்.

     தெற்றென : விரைவு குறித்தது. விடுகென : அகரந்தொக்கது.
சொற்றனர் : முற்றெச்சம். மற்று, தாம் என்பன அசைகள். (17)

கங்குல்வாய்க் கண்டவக் கனவைப் பெண்ணையந்
தொங்கலான் றமரொடு சொல்லிச் சேற்கணாள்
பங்கினான் றிருமுகங் கொணர்ந்த பத்திரன்
எங்குளான் கொல்லெனத் தேட வெண்ணுவான்.

     (இ - ள்.) பெண்ணையந் தொங்கலான் - அழகிய பனம் பூ மாலையை
யணிந்த அவ்வேந்தன், கங்குல்வாய்க் கண்ட அக்கனவை - இரவிலே கண்ட
அக்கனவினை, தமரோடு சொல்லி - அமைச்சரோடு கூறி, சேல் கணாள்
பங்கினான் திருமுகம் கொணர்ந்த பத்திரன் - அங்கயற் கண்ணி யார்
பங்கனது திருமுகத்தைக்கொண்டு வந்த பாணபத்திரன், எங்குளான்
கொல்லென - எங்கிருக்கின்றானோ என்று, தேட எண்ணுவான் - தேடக்
கருதுவான்.

     அம், சாரியையுமாம். கொல் : ஐயப்பொருட்டு. (18)