பொதுமகளிர் நினைவெனவும்
பரம்பொருளெனவும் அகலும் என்றார்.
பரம்பொருள் ஆன்மபோதத்தால் காணப்படுவதன்றென்பதனை,
"தன்னறி வதனாற் காணுந் தன்மைய
னல்ல னீசன்" |
என்னும் சிவஞான
சித்தியால் அறிக.
ஏவ லாளரோ
டின்னவா றின்னமீன் படுத்தற்
காவ தாந்தொழி லியற்றவு மகப்படா தாக
யாவ ரேயிது படுப்பவ ரென்றிருங் கானற்
காவ லாளனும் பரதருங் கலங்கஞ ருழந்தார். |
((இ
- ள்.) ஏவலாளரோடு இன்னவாறு - ஏவலாளருடன் இங்ஙனம்,
இன்ன மீன் படுத்தற்கு ஆவது ஆம் தொழில் இயற்றவும் - இந்த மீனைப்
பிடிப்பதற்கு உரிய தொழிலைச் செய்யவும், அகப்படாதாக - அஃது
அகப்படாதாக; யாவரே இது படுப்பவர் என்று - இனி யாவரே இதனைப்
பிடிக்கவல்லார் என்று கருதி, இருங்கானல் காவலாளனும் - பெரிய
நெய்தனிலத்தலைவனும், பரதரும் கலங்கு அஞர் உழந்தார் - பரதவரும்
பெருந்துன்பத்தால் வருந்தினார்கள்.
(ஆவதாம்தொழில்
- பொருந்திய வினை. கலங்கு அஞர் - நெஞ்சு
கலங்குந்துன்பம். (41)
சங்க லம்புதண்
டுறைகெழு நாடனிச் சலதித்
துங்க மந்தர மெனக்கிடந் தலமருஞ் சுறவை
இங்க ணைந்தெவன்* பிடிப்பவ னவனியா னீன்ற
மங்கை மங்கலக் கிழானென மனம்வலித் திருந்தான். |
((இ
- ள்.) சங்கு அலம்பு தண்துறை கெழுநாடன் - சங்குகள்
ஒலிக்கும் குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்திய கடல் நாடன், இச்சலதி - இக்
கடலின்கண், துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரு சுறவை - வலிமிக்க
மந்தரமலைபோலக் கிடந்து கலக்கும் சுறாமீனை, இங்கு அணைந்து எவன்
பிடிப்பவன் - இங்கு வந்து பிடிப்பவன் எவனோ, அவன் யான் ஈன்ற
மங்கை மங்கலக்கிழான் என - அவனே யான் பெற்ற மங்கையின்
மணவிழாவுக்கு உரியவன் என்று, மனம் வலித்திருந்தான் -
உறுதிகொண்டிருந்தான்.
(கிழான்
- உரியவன். வலித்தல் - உறுதியாக எண்ணுதல். (42)
நந்தி நாதனு
மினையனா யங்கய னாட்டத்
திந்து வாணுத லாளுமங் கனையளா யிருப்பத்
தந்தி நாலிரண் டேந்திய தபனிய விமானத்
துந்து நீர்ச்சடை யார்மண முன்னினார் மன்னோ. |
(பா
- ம்.) * அங்கணைந்தெவன்.
|