லன்றி, இக்கொடிய
வெம்பாசம் - இந்தக் கொடிய வெவ்விய பாசமாகிய
கடலை, புரைஇல் கேள்வியால் கடப்பது - குற்றமில்லாத நூற்கேள்வியினால்
கடக்கக் கருதுதல், உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவது ஒக்கும் - வலிய
நீரினையுடைய கடலைக் கையினால் நீந்திக் கடக்கக் கருதுதலை ஒக்கும்.
இறைவன் கரவுடையார்க் கறிவரியன்
என்பதனை,
ழுகரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைழு |
ழுபொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப னவர்தமை நாணியேழு |
என்னும் தேவாரங்களானறிக. கொடிய வெம்,
ஒரு பொருளில் வந்த இரு
சொல். நீந்துவதொக்கும் என்றது முடியா தென்றவாறு. (14)
என்றவ்
வாதவூர்*மறையவ ரின்பவீ டெய்தத்
துன்று மாசையாற் றொடக் குண்டு சுருதியா கமநூல்
ஒன்று கேள்வியோர் வருந்தொறு முணர்ந்தவ ரிடைத்தாஞ்
சென்று காண்டொறு மளவளாய்த் தேர்குவா ரானார். |
(இ
- ள்.) என்று அவ்வாதவூர் மறையவர் - என்று கருதி
அவ்வாதவூரராகிய அந்தணர், இன்பவீடு எய்தத்துன்றும் ஆசையால்
தொடக்குண்டு - பேரின்ப வீட்டினை அடைய வேண்டுமென்னும் மிக்க
ஆசையினாற் கட்டுண்டு, சுருதி ஆகம நூல் ஒன்று கேள்வியோர்
வருந்தொறும் - வேதமும் ஆகமமுமாகிய நூல்களிற் பொருந்திய
கேள்விவல்லுநர் தம்மிடம் வருந்தோறும், உணர்ந்தவர் இடை தாம் சென்று
காண்தொறும் - அவற்றை உணர்ந்தாரிடந் தாஞ்சென்று காணுந்தோறும்,
அளவளாய்த் தேர்குவார் ஆனார் - அவர்களோடு கலந்து
ஆராய்வாராயினர்.
மேல் நான்கு பாட்டிலும் சொன்னவற்றைச் சுட்டி என்று என்றார்.
கேள்வியோர் நகர்க்கு வருந்தொறும் உணர்ந்து அவரிடைத் தாம் சென்று
காண்டொறும் என்றுரைத்தலுமாம்;
ழுவளங்கெழு புவியி னுள்ள வாவியுங்
காவு மோடி
விளங்கிசை வண்டு தண்டேன் மிகுமலர் தேடு மாபோல்
உளங்கொள நிமல னன்னூ லோதின ருண்மை யெல்லாம்
அளந்தறி வுணர்ந்த நீரார் யாவரென் றாயு நாளில்ழு |
என்பது வாதவூரடிகள்
புராணம். (15)
எண்ணி லாரிடத்
தளந்தளந் தறிபொரு ளெல்லாம்
உண்ணு நீர்விடாய்க் குவரிநீ ருண்டவ ரொப்ப
அண்ண லாரகத் தமைவுறா தரசனுக் குயிருங்
கண்ணு மாயமைச் சுரிமையுங் கைவிடா தியல்வார் |
(பா
- ம்.) * என்றிவ்வாதவூர்.
|