230திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"வையக மன்ன ராகி வாழ்வதின் மனைக டோறும்
எய்திய வுதரத் தீயா லிரப்பது பெருமை யென்றும்
மெய்தகத் தம்மை யாண்ட வேந்தரைப் பிழைத்து வேறு
செய்வது பலிக்கு மென்று தேர்ந்தநூற் றுணிவுங் கண்டேம்."

"மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்சநஞ் சுமிழு நாகந்
தன்னுடன் மருவி வாழுந் தன்மையென் றுணர்வீராயில்
துன்னுமிவ் வோலை காணும் பொழுதுநந் தூதர் தம்மோ
டிந்நகர் வருக மாற னெழுத்தென வுரைத்து நின்றான்"

என விரித்துரைக்கப் பெற்றுளது. (66)

சிந்தை யாகிய செறுவினுட் சிவமுத லோங்கப்
பந்த பாசம்வே ரறக்களைந் தருட்புனல் பாய்ச்சி
அந்த மாதியின் றாகிய வானந்த போகந்
தந்த தேசிக வுழவன்றன் கோயிலைச் சார்ந்தார்.

     (இ - ள்.) சிந்தையாகிய செறுவினுள் - உள்ளமாகிய விளை நிலத்துள்,
சிவ முதல் ஓங்க - அன்பாகிய முளை வளர, பந்தபாசம் வேர்அறக்
களைந்து - பந்தமாகிய பாசமென்னும் களையினை வேரறக் களைந்து,
அருள் புனல் பாய்ச்சி - அருளாகிய நீரினைக் கால்யாத்து, அந்தம் ஆதி
இன்று ஆகிய - முதலு முடிவும் இல்லையாகிய, ஆனந்த போகம் தந்த
தேசிக உழவன்தன் - சிவானந்தமாகிய விளைவினைப் புசிக்குமாறு தந்தருளிய
குரவனாகிய உழவனது, கோயிலைச் சார்ந்தார் - திருக் கோயிலைச்
சார்ந்தனர்.

     சிவம் - அன்பு; பத்தி. பிறவாறும் உருவகஞ் செய்ப;

"அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட வழவ ராரத் தந்த
அண்டத் தரும்பிபறன் மேகன் வாழ்க"

என்னும் திருவாசகமும்,

"மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே"

என்னும் திருநாவுக்கரசர் தேவாரமும்,

"அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில்
பத்தித் தளிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று"