246திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அன்பர்களின் பெரிய சுமை யனைத்தையும், தாங்குவார் அவரே அன்றோ -
தாங்குவார் அவரே அல்லவா.

     சயிலம், சைலம் என்பதன் போலி. சொல் நெடுந்தாள் - சொல்வரம்
பிறந்த பாதம் என்றுமாம்;

"பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்"

என்னும் திருவாசகமுமகாண்க. இது வேற்றுப்பொருள் வைப்பணியின்
பாற்படும். (8)

சிலையது பொறைதோற் றாது சிவனடி நிழலி னின்றார்
நிலையது நோக்கி மாய நெறியிது போலு மென்னாக்
கொலையது வஞ்சா வஞ்சர் கொடுஞ்சினந் திருகி வேதத்
தலையது தெரிந்தார் கையுந் தாள்களுங் கிட்டி யார்த்தார்.

     (இ - ள்.) சிலையது பொறை தோற்றாது - கல்லின்பாரம்
தோன்றாமல், சிவன் அடி நிழலில் நின்றார் நிலையது நோக்கி -
சிவபெருமான் திருவடி நிழலின் கண் நின்ற அடிகளின் தன்மையைப்
பார்த்து, இது மாயநெறி போலும் என்னா - இது ஓர் மாய வழிபோலும்
என்று கருதி, கொலையது அஞ்சாவஞ்சர் - கொலையினைச்சிறிது மஞ்சாத
வஞ்சத்தறுகணாளர், கொடுஞ்சினம் திருகி - கொடிய சினம் முறுகி,
வேதத்தலையது தெரிந்தார் - மறையின் முடியினை அறிந்த அடிகளின்,
கையும் தாள்களும் கிட்டி ஆர்த்தார் - கைகளிலும் கால்களிலும் கிட்டி
கட்டினார்.

     சிலையது, அது ஆறனுருபு. நிலையது முதலிய மூன்றிலும் அது பகுதிப்
பொருள் விகுதி. (9)

அக்கொடுந் தொழிலு மஞ்சா திருந்தன ரரனை யுள்கி
இக்கொடுந் தொழிலி னார்தா மினிநனி யொறுப்ப ரென்னாப்
புக்கது காண்டற் குள்ளம் பொறானென விரவிப் புத்தேள்
மிக்கதன் னொளிகண் மாழ்கி விரிகட லழுவத் தாழ்ந்தான்.

     (இ - ள்.) அக்கொடுந் தொழிலும் அஞ்சாது - அந்தக்கொடிய
செய்கைக்கும் அஞ்சாமல், அரனை உள்கி இருந்தனர் - இறைவனை
நினைந்து (துன்பின்றி) இருந்தனர்; இக்கொடுந் தொழிலினார் தாம் -
இந்தக்கொடிய தண்டலாளர், இனி நனி ஒறுப்பர் என்னா - இனி மிகவுந்
தண்டிப்பர் என்று கருதி, அதுகாண்டற்கு உள்ளம் பொறான் என -
அதனைப் பார்த்தற்கு உள்ளம் பொறுக்கலாற்றாதவனைப் போல,
இரவிப்புத்தேள் - சூரியதேவன், மிக்க தன் ஒளிகள் மாழ்கி - தன்னுடைய
மிகுந்த கிரணங்கள் கெட்டு, விரிகடல் அழுவத்துப்புக்கு ஆழ்ந்தான் -
விரிந்த கடற் பரப்பின்கட் சென்று அழுந்தினன்.

     தாம், அசை. இயல்பாக அத்தமித்த சூரியனை அது காண்டற்கு
உள்ளம் பொறானென ஆழ்ந்தான் என்றமையால் இது தற்குறிப்பேற்றவணி.
(10)