பழித்தழல் இழைத்தார்
- முத்தமிழ் வித்தகர்மேற் பழிவேள்வி செய்தனர்.
வைதிக
மடங்கலேறு என்க. அயல்மலை இடங்கள் - ஆனைமலை
முதலிய எண் குன்றங்கள்;
"ஆனை மாமலை யாதி யாய விடங்க
ளிற்பல வல்லல் சேர்
ஈனர் கட்கெளியேன லேன்றிரு வால வாயர னிற்கவே" |
என்று பிள்ளையார்
அருளிச்செய்தலுங்காண்க. பழித்தழல் - அபிசார வேள்வி. (42)
மெய்யில் சிந்தையா ரத்தழற் கடவுளை விளித்தாங்
கெய்தி யெம்பகை யாயினோ ரிருக்கையை யமுது
செய்து வாலெனப் பணித்தனர்* சிறுவிதி மகத்துக்
கையி ழந்தவன் செல்லுமோ வஞ்சினான் கலங்கி. |
(இ
- ள்.) மெய்இல் சிந்தைார் - உண்மையில்லாத உள்ளத்தையுடைய
சமணர், அத்தழற் கடவுளை விளித்து - அத்தீக் கடவுளை அழைத்து, ஆங்கு
எய்தி - அங்குச் சென்று, எம் பகையாயினோர் இருக்கையை அமுது செய்து
வா எனப் பணித்தனர் - எமது பகைவரின் இருப்பிடத்தை உண்டு
வருவாயாகவென்று கட்டளை யிட்டனர்; சிறுவிதி மகத்தில் கை இழந்தவன் -
தக்கன் வேள்வியில் கை அறுபட்ட அவன், செல்லுமோ - செல்வானோ,
கலங்கி அஞ்சினான் - மனங்கலங்கி அஞ்சினான்.
மெய்யில்
சிந்தை - பொய் குடிகொண்ட சிந்தை. மந்திரத்தால்
அத்தீக்கடவுளை அழைத்து என்க. சிவபிரானுக்கு மாறாகத் தக்கன் புரிந்த
வேள்வியிற் சென்று கை குறைபட்டவன் சிவகுமாரராகிய திருஞான
சம்பந்தர்க்கு மாறாக அவர் இருக்கையிற் றுணிந்து செல்வனோ என அவன்
செல்லாமைக்கு ஏதுக் காட்டினர்;
"தவமறைந் தல்ல செய்வார் தங்கண்மந்
திரத்தாற் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்" |
"ஆதி மந்திர மஞ்செழுத் தோதுவார்
நோக்கு
மாதி ரத்தினு மற்றைமந் திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்திற்றாம் புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண் குண்டர்க டளர்ந்தார்" |
என்னும் சேக்கிழார்
திருவாக்குகளும் காண்க. (43)
ஈனர் தாஞ்சடத்
தீயினை யெடுத்தன ரேகி
ஞான போனகர் மடத்தினிற் செருகினார் நந்தா
தான தீப்புகை யெழுவதை யடியவர் கண்டு
வான நாயகன் மைந்தருக் குணர்த்தினார் வல்லை. |
(பா
- ம்.) * வாவென விடுத்தனர்.
|