சங்கப்பலகை தந்த படலம்47



     (இ - ள்.) மருளுமாறும் - மயங்குமாறும், மயக்கு அற வான் பொருள்
தெருளுமாறும் - அம்மயக்கம் நீங்க உண்மைப் பொருள் தெளியுமாறும்,
செயவல்ல கள்வர் - செய்தற்கு வல்ல கள்வரும், சொல் பொருளும் ஆம்
மதுரேசர் - சொல்லும் பொருளுமாம் மதுரேசரு மாகிய சோமசுந்தரக் கடவுள்,
புலவர் முன் அருளும் நாவலராய் வந்து தோன்றினார் - அப்புலவர்கள் முன்
அருளுகின்ற ஒரு புலவராய் வந்து தோன்றினார்.

     இறைவர் சொல்லும் பொருளுமாதலை,

ழுசொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பிழு

என நம்பியாரூரர் தேவாரத்துள் ஓதுதலான் அறிக.

வந்த நாவலர் வந்திக்கு நாவலர்
சிந்தை யாகுலஞ் செய்ய மயக்குறும்
பந்த யாப்பைக் கொணர்கெனப் பாவலர்
எந்தை யீங்கிவை யென்றுமுன் னிட்டனர்.

     (இ - ள்.) வந்த நாவலர் - அங்ஙனம் வந்த நாவலராகிய இறைவர்,
வந்திக்கும் நாவலர் சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும் - தம்மை வணங்கும்
புலவர்களின் மனம் வருந்த மயக்கும், பந்த யாப்பைக் கொணர்க என -
தளையமைந்த செய்யுட்களைக்கொண்டு வருவீராக என்று கட்டளையிட,
பாவலர் - அப்புலவர்கள், எந்தை - எம்தந்தையே; ஈங்கு இவை என்று முன்
இட்டனர் - இங்குள இவையே என்று அவற்றைக்கொண்டு வந்து திருமுன்
வைத்தனர்.

     பந்தம் தளை. யாப்பு - செய்யுள் என்னும் பொருட்டு. கொணர் கென :
அகரந்தொகுத்தல். (34)

தூய சொல்லும் பொருளின் றொடர்ச்சியும்
ஆய நாவல ரவ்வவர் தம்முது
வாய பாடல் வகைதெரிந் தவ்வவர்க்
கேய வேயெடுத் தீந்தன ரென்பவே.

     (இ - ள்.) தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும் ஆய நாவலர்
- தூய சொல்லும் தொடர்ந்த பொருளுமாகிய அந்நாவலர் பெருமான்,
அவ்வவர்தம் முதுவாயபாடல் - அவ்வப்புலவர்களின் பொருள் முதிர்ச்சி
வாய்ந்த பாடல்களின், வகை தெரிந்து - வேறுபாடுகளை அறிந்து,
அவ்வவர்க்கு ஏயவே - அவ்வவர்க்கு மனம் பொருந்துமாறு, எடுத்து ஈந்தனர்
- எடுத்து அளித்தனர்.

     பொருளின் றொடர்ச்சி என்பதனைத் தொடர்ந்த பொருள் என மாறுக.
சொல்லும் பொருளுமாம் என்பதற்கு மேல் எடுத்துக்காட்டினமை காண்க.
இதற்குச் சொல்லின் தொடர்ச்சியும் பொருளின் றொடர்ச்சியும் ஆராய