492திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இடத்தாள் நீட்டி - அண்டந் தொளைபடுமாறு இடதுகாலை நீட்டி, அற்புதன்
ஞானவடிவினனாம் இறைவன், காளி தோற்க ஆடியது இது - காளி
தோல்வியடைய ஆடியருளிய திருவாலங்காடு இது; மாநீழல் - மாமரத்தின்
நிழலில், கற்புடை ஒருத்தி நோற்கும் பிலம் இது காண்மின் காண்மின் -
கற்புடைய காமாக்ஷியம்மை தவஞ் செய்யும் பிலத்துவாரமாகிய காஞ்சிபுரம்
இது பாரும் பாரும்.

     பாகம் பார்த்தல் - சுவை பார்த்தல்; ஈண்டுத் திருவமுது செய்தல்
என்னும் பொருட்டு. கண்ணப்பர் ஊனினை மென்று அளித்தமையை

ழுவெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பால்
நையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினியழு

என்னும் பெரியபுராணச் செய்யுளா னறிக. இத்தலம் பாம்பும் யானையும்
வழிபட்டமையால் காளத்தி யென்னும் பெயர் பெற்றது; விராட் புருடனுக்கு
விசுத்தித்தானமாகவும், ஐம்பூதத் தலங்களுள் வாயுத்தலமாகவும், தென்
கயிலாயம் என்று சிறப்பிக்கப் பெறுவதாகவும் உள்ளது; அன்பு பிழம்பாகிய
கண்ணப்பர் ஆறுநாளிலே முத்தி பெற்று இறைவற்கு வலப்பாகத்தில்
எழுந்தருளியிருக்கும் பெருமையுடையது; மூவர் தேவாரமும் பெற்ற
தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. அற்புதன் காளி தோற்க ஆடியது
- சிவபெருமான் தம்மோடு வாது செய்த காளியை ஊர்த்துவ தாண்டவம்
புரிந்து தோல்வியுறுவித்த தலம்; திருவாலங்காடு; ஐந்து மன்றங்களுள் வடக்கி
லுள்ளதாகிய இரத்தின மன்றம்; காரைக்காலம்மையார் தலையாலே நடந்து
வந்து இறைவனுடைய திருவடிக்கீழ் என்று மிருக்கும் பெருமை சான்றது;
மூவர் தேவாரங்களுடன் அம்மையார் பாடிய பதிகங்களும் பெற்றுள்ள
தொண்டை நாட்டுத் திருப்பதி; இஃது அடுத்துள்ள பழையனூருடன் சேர்த்துப்
பழையனூ ராலங்காடு என்று பதிகங்களிற் கூறப்பெற்றுள்ளது.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து பதிகங்கள் பாடித்
திருவடிக்கீழ் இருத்தலை,

ழுஅப்பரி சருளப் பெற்ற வம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை யன்பாற் றிகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே நடந்துபுக் கடைந்தா ரன்றேழு

ழுஆலங்கா டதனி லண்ட முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை திரங்கியென் றெடுத்துத் தங்கு
மூலங்கா ணாதார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்று நடம்போற்றி நண்ணு நாளில்ழு

ழுமட்டவிழ்கொன் றையினார்தந் திருக்கூத்து முன்வணங்கும்
இட்டமிகு பெருங்காத லெழுந்தோங்க வியப்பெய்தி
எட்டியில வம்மீகை யெனவெடுத்துத் திருப்பதிகம்
கொட்டமுழ வங்குழக னாடுமெனப் பாடினார்ழு

ழுமடுத்தபுனல் வேணியினா ரம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்