| முகப்பு |
அசமுகி நகர் காண்படலம்
|
|
|
|
|
|
3453.
|
இன்னன பல பல எய்தச் சூரன் ஆம்
மன்னவன் இருத்தலும் மற்று அவ் வெல்லையில் தொல் நகர் அணித்து உறத் துன் முகத்தினாள் தன்னொடும் அசமுகி தான் வந்து எய்தினாள். |
1 |
|
|
|
| |
|
|
|
|
|
3454.
| மோட்டு உறு மகேந்திர முதிய மாநகர் கூட்டு உறு திரு எலாம் குலைய முன்னவள் மாட்டு உறு துணையொடு வந்து உற்றால் எனக் கீட்டிசை வாய்தலைக் கிட்டினாள் அரோ. |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
3455.
| கெழுதரும் அசமுகக் கெடல் அணங்கு தன் பழி தருகையினைப் பார்த்து நேர்ந்துளார் அழி தரு துன்பு கொண்டு அழலில் சீறினார் இழிதரும் இச்செயல் யார் செய்தார் எனா. |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
3456.
| மானம் இல் அசமுகி மகேந்திரப் புரம் தானுரு துயர்க்கு ஒரு தாரி காட்டல் போல் ஊன் உறு குருதி கை உகுப்பச் சென்றுழி ஆனது கண்டனர் அவுணர் யாவரும். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
3457.
| வட்டு உறு பலகையின் வல்ல நாய் நிரைத்து இட்டனர் கவற்றினை இசைத்த சூள் ஒடும் கிட்டினர் இடம் தொறும் கெழுமி ஆடினர் விட்டனர் அத்தொழில் விரைந்து உற்றார் சிலர். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
3458.
| தெரிதரு கரிய பொன் திரித்திட்டால் எனப் புரிதரு மருப்பு உடைப் புலியன் செச்சையை முரிவரு பேர் அமர் மூட்டிக் கண்டு உளார் பரிவொடு பிரிந்து அயல் படர் கின்றார் சிலர். |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
3459.
| கார்ப் பெயல் அன்னதோர் கடாம் கொள் மால்கரி கூர்ப் புறு மருப்பு மெய் குளிப்பச் சோரி நீர் ஆர்ப்பொடு தத்தம் இல் ஆடல் செய்வது பார்ப்பது விட்டனர் படர்கின்றார் சிலர். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
3460.
| துய்யது ஓர் கிஞ்சுகச் சூட்டு வாரணம் மொய்யொடு தன் உயிர் முடியும் எல்லையும் செய்யுறு வெம் சினச் செருவை நோக்கினார் ஒய் என நீங்கியே உறுகின்றார் சிலர். |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
3461.
| ஊனம் இல் பல பணி உடன்று சீறியே பானுவை நுகர விண் படரும் ஆறு என வானிகள் ஓச்சினர் வானில் கைவிடா மேனிகள் வியர்ப்பு உற வெகுண்டு உற்றார் சிலர். |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
3462.
| வாம் பரி தேர் கரி மானம் பாண்டில்கள் ஏம்பலோடு ஊர்ந்திட இயற்றும் கல் பொரீஇ யாம் பொருள் அல்லது ஒன்று அடைவது என் எனச் சோம்புதல் இன்றியே தொடர்கின்றார் சிலர். |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
3463.
| குறி கெழு வெளில் ஒடு குற்றி நாட்டியும் அறிகுறி தீட்டியும் அவை இலக்கமா எறிகுறு படையினை எய்யும் கோலினை நெறி தொறும் விட்டு அவண் நேர்கின்றார் சிலர். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
3464.
| நாந்தகம் ஆதியா நவிலும் தொல் படை ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னம் ஆய் ஏய்ந்திடும் கழகம் உற்று இயற்று மாறொரீஇப் போந்தனர் ஒரு சிலர் பொருமல் மிக்கு உளார். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
3465.
|
வாள் படு கனலிகால் வானின் கண்ணவாம்
காட்புறு நரம்பு யாழ் காமர் வீணைகள் வேட்பு உறும் ஈர்ங்குழல் மிடறு கால் இசை கேட்பது விட்டு அவண் கிட்டினார் சிலர். |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
3466.
| நாடக நூல் முறை நுனித்து நன்று உணர் கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர் ஆடு உறு கோட்டிகள் அகல் உற்று அங்ஙனம் கூடினர் ஒரு சிலர் குலையும் மெய்யினார். |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
3467.
| புலப்படு மங்கலப் பொருள் முற்றும் கொடு நலப்படு வேள்விகள் நடத்திக் கேள் ஒடு பலப்பல வதுவை செய் பான்மை நீத்து ஒராய்க் குலைப்புறு கையொடும் குறு குற்றார் சிலர். |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
3468.
| மால் ஒரு மடந்தை பால் வைத்து முன் உறு சேல் விழி ஒருத்தி பால் செல்ல ஊடியே மேல் உறு சினத்து இகல் விளைக்க நன்று இது காலம் என்று உன்னியே கழன்று உற்றார் சிலர். |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
3469.
| தோடு உறு வரி விழித் தோகை மாருடன் மாடமது இடை தொறும் வதிந்த பங்கயக் காடு உறு பூம் தடம் காமர் தண்டலை ஆடலை வெறுத்து எழீஇ அடைகின்றார் சிலர். |
17 |
|
|
|
| |
|
|
|
|
|
3470.
| சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகை அம் கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார் உள் உறுத்திய புலன் ஊசல் போன்று உளார் தள் உறத் தள் உறத் தளர்ந்து உற்றார் சிலர். |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
3471.
| அனைய பல் வகையினர் அவளைக் கண்டுளார் பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர் கனலொடு தீப்புகை கால் உயிர்ப்பினர் முனி உறு கின்றனர் மொழிகின்றார் இவை. |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
3472.
|
அந்தகன் ஒருத்தன் பேரோன் ஆடல் வல்லியத்தோன்
ஆதி
வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
முந்து உறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
செம்தழல் உருவத்து அண்ணல் செய்கையோ இனையது
என்பார். |
20 |
|
|
|
| |
|
|
|
|
|
3473.
|
மேதியம் சென்னிவீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன்
கோது அறு குருதிக் கண்ணன் குருதி அம் குரத்தன்
முந்தே
பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில் தாரகனே பண்டன்
ஆதியர் ஆயுள் கொண்ட ஐயை தன் செயலோ என்பார். |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
3474.
|
சிரபத்தி அளவை இல்லாத் திறல் அரி ஒரு நால் தந்தக்
கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கம் செய்ய
வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாள்
சரபத்தின் வடிவம் கொண்டான் தன் செயலாம் கொல்
என்பார். |
22 |
|
|
|
| |
|
|
|
|
|
3475.
|
வண்டு உளர் கமலச் செம் கண் மாயனும் தூய நீலம்
கண்டம் அது அடைத்த தேவும் கலந்தனர் தழுவிச் சேரப் பண்டு அவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசால் உற்ற செண்டு உறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். |
23 |
|
|
|
| |
|
|
|
|
|
3476.
|
பிளிற்று உறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை
எயிற்றுப் புன்கண்
வெளிற்று உறு தடக்கை கொண்ட வேழமா முகத்து
எம்மேலோன்
ஒளிற்று உறு கலன்மார்பு எய்தி உயிர் குடித்து
உமிழ்ந்த தந்தக்
களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும்
என்பார். |
24 |
|
|
|
| |
|
|
|
|
|
3477.
|
ஈசனை மதிக்கிலாதே யாம் முதல் கடவுள் என்று
பேசிடு தலைவர்க்கு ஏற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
ஆசு அறு சங்கு கன்னன் அகட்டு அழல் குண்டம்
போல்வான்
தேசு உறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
3478.
|
நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாக அணைப் பள்ளி மீது
தஞ்ச மொடு இருந்த அண்ணல் தன் செயலாமோ என்பார்
அஞ்சுவன் இனைய செய்கைக்கு அனையது நினைவு
அன்று
என்பார்
நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன்
என்பார். |
26 |
|
|
|
| |
|
|
|
|
|
3479.
|
புரந்தரன் என்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ
என்பார்
கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன்று
என்பார்
இருந்திடு கடவுளோர்கள் இழைத்திடும் விதியோ
என்பார்
நிரந்து நம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை
என்பார். |
27 |
|
|
|
| |
|
|
|
|
|
3480.
|
கழைத்துணி நறவ மாந்திக் களிப்பு உறா உணர்ச்சி
முற்றும்
பிழைத்தவர் ஆகும் அன்றேல் பித்தர் செய்தனராம்
என்பார்
இழைத்த நாள் எல்லை சென்றோர் இயற்றியார் யாரோ
என்பார்
விழுப்பெரு முனிவர் சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை
என்பார். |
28 |
|
|
|
| |
|
|
|
|
|
3481.
|
அங்கியின் கிளர்ச்சியே போல் அவிர் சுடர்க் கூர்
வாள் தன்னைத்
தங்களில் ஏந்தி இன்னோர் சான்ற சூள் உறவு சாற்றித்
துங்கமொடு அமரின் ஏற்று முறை முறை துணிந்தார்
கொல்லோ
இங்கு இவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். |
29 |
|
|
|
| |
|
|
|
|
|
3482.
|
ஆர் இவள் கரத்தில் ஒன்றை அடவல்லார் எவர்
கண்ணேயோ
பேர் உறு காதல் கொண்டு பெண் மதி மயக்கம்
தன்னால்
சீரிய உறுப்பில் ஒன்று சின்னமாத் தருவன் என்று
கூர் உடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும்
என்பார். |
30 |
|
|
|
| |
|
|
|
|
|
3483.
|
கேடு உறும் இனையள் தன்னைக் கேட்பது என்
இனிநாம் என்பார்
நாடி நாம் வினாவினோமேல் நம் எலாம் முனியும் என்பார்
மாடு உறப் போவது என்னை மா நில வரைப்பின் காறும்
ஓடியே அறிதும் என்பார் இனையன உரைத்த லோடும். |
31 |
|
|
|
| |
|
|
|
|
|
3484.
|
சொல் இயல் சூரன் தங்கை துன்முகியோடு கை போய்
வல்லையில் போதல் கேளா மம்மருள் அவுண மாதர்
சில் இயல் கூந்தல் தாழத் தெருத் தொறும் செறிந்து
கஞ்சம்
ஒல்லை முத்து உதிர்ப்பது என்ன ஒண்கணீர் உகுத்துச்
சூழ்ந்தார். |
32 |
|
|
|
| |
|
|
|
|
|
3485.
|
அந் நகர் மகளிர் யாரும் ஆடவர் யாரும் சூழ்ந்து
துன்னினர் இனைய வாற்றால் துயர் உழந்து இரங்கிச்
சோரப்
பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்கு கோ நகரம் போந்து
மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக்கு அணியள்
ஆனாள். |
33 |
|
|
|
| |
|
|