| முகப்பு |
சூரன் அமைச்சியற் படலம்
|
|
|
|
|
|
4711
|
அந்த நல் அமையம் தன்னின் அவுணர் கோன் ஏவல் போற்றி
முந்து செல் ஒற்றர் ஆனோர் மூரி நீர்க் கடலை வாவிச்
செந்தியில் சென்று கந்தன் சேனையும் பிறவும் தேர்ந்து
வந்தனர் விரைவின் அம் கண் மன்னனை வணங்கிச் சொல்வார்.
|
1 |
|
|
|
| |
|
|
|
|
|
4712.
|
ஏற்ற வெம் பூத வெள்ளம் ஈராயிரம் படையின் வேந்தர்
நூற்றுடன் எண்மர் பின்னும் நுவல் அரும் சிறப்பின் மிக்கோர்
மேல் திகழ் இலக்கத்து ஒன்பான் வீரர் மற்று இனைய ரோடும்
தோற்றம் இல் பரமன் மைந்தன் தொடு கடல் உலகின் வந்தான்.
|
2 |
|
|
|
| |
|
|
|
|
|
4713.
|
சரதம் ஈது அவுணர் கோவே தாரக வீரன் தன்னைக்
கரை அறு மாயை போற்றும் காமரு பிறங்கல் தன்னை
இரு பிளவாக வேலால் எறிந்தனன் ஈறு செய்து
திரை பொரும் அளக்கர் வேலைச் செந்திமா நகரின் உற்றான்.
|
3 |
|
|
|
| |
|
|
|
|
|
4714.
|
விலங்கிய கதிர்வேல் அண்ணல் விரைந்து இவண் மேவும் ஆற்றால்
உலம் கிளர் மொய்ம்பில் தூதன் ஒருவனை விடுத்தான் அன்னான்
இலங்கையை அழித்து வந்தான் யாளிமா முகவன் தன்னை
வலங்கையின் வாளால் செற்று வாரிதி கடந்து போனான். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
4715.
|
செம் கதிர் அயில் வேல் மைந்தன் தெண்டிரைப் புணரி வாவி
பொங்கு வெம் கணங்களோடும் போர்ப்படை வீரரோடும்
இங்கு வந்து ஆடல் செய்வான் எண்ணினன் இருந்தான் ஈது
சங்கை என்று உன்னல் வாய்மை தகுவன உணர்தி என்றார்.
|
5 |
|
|
|
| |
|
|
|
|
|
4716.
|
ஒற்றர் சொல் வினவி மன்னன் ஒருதனி இளவல் தன்னை
அற்றம் இல் கேள்வி சான்ற அமைச்சரை மைந்தர் தம்மைச்
சுற்றமொடு அமைந்த தானைத் தொல் பெரும் தலைமை யோரை
மற்று ஒரு கணத்தின் முன்னர் மரபொடு கொணரு வித்தான்.
|
6 |
|
|
|
| |
|
|
|
|
|
4717.
|
ஆங்கு அவர் யாவரும் அவுணர் மன்னவன்
பூம் கழல் கை தொழூஉப் புடையின் வைகலும்
தீம் கனல் சுடுவது ஓர் சீற்றம் உள் எழ
வீங்கிய உயிர்ப்பினன் விளம்பல் மேயினான். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
4718.
| போற்றலர் ஆகிய புலவர் யாரையும் மாற்றரும் சிறையில் யான் வைத்த பான்மையைத் தேற்றிய மகபதி சென்று சென்னிமேல் ஆற்றினை வைத்திடும் அமலற்கு ஓதினான். |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
4719.
| கண் நுதல் உடையது ஓர் கடவுள் வல்லை ஓர் அண்ணல் அம் குமரனை அளித்து மைந்த நீ விண்ணவர் சிறையினை வீட்டிச் செல்க எனத் துண் என நம்மிசைத் தூண்டினான் அரோ. |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
4720.
| வாய்த்திடு கயிலை மால் வரையை வைகலும் காத்திடு நந்தி தன் கணத்து வீரரும் மீத்தகு பூதரும் விரவ மால் அயன் ஏத்திட அரன் மகன் இம்பர் எய்தினான். |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
4721.
|
பார் இடை உற்று உளான் பாணி கொண்டது ஓர்
கூர் உடை வேலினால் கொடிய குன்று ஒடு தாரக இளவலைத் தடிந்து பின் உற வாரிதி அகன் கரை வந்து வைகினான். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
4722.
| அன்னதோர் அறுமுகன் ஆங்கு ஒர் தூதனை என் இடை விடுத்தலும் ஏகி மற்று அவன் மைந் நிற நெடுங்கடல் வரைப்பில் பாய்ந்து ஒராய்ப் பொன் அவிர் இலங்கைமா புரத்தை வீட்டினான். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
4723.
| இலங்கை அம் காவலும் இகப்பு உற்று இன்னதோர் பொலங்கெழு திரு நகர் நடுவண் புக்கு உலாய் நலம் கிளர் என்ன அவைக் களத்தின் நண்ணினான் கலங்கலன் நிறையது மாயைக் கற்பினான். |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
4724.
| நண்ணினன் எதிருற நவை இல் வீரர் போல் விண்ணவர் பாங்கராச் சில விளம்பி என் கண் முனம் சிலர் உயிர் களைந்து வன்மையால் எண்ணலன் பின் உற எழுந்து போயினான். |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
4725.
| போய் அவன் இந்நகர் பொடித்துச் சிந்தியான் ஏயின ஏயின படைஞர் யாரையும் மாய் உறு வித்தனன் மற்றும் என் இளம் சேய் உயிர் கொண்டனன் செருக்கு நீங்கலான். |
15 |
|
|
|
| |
|
|
|
|
|
4726.
| அழிந்தது இத்திரு நகர் அளப்பு இல் தானைகள் கழிந்தன செறிந்தது களே பரத் தொகை கிழிந்தது பாரகம் கெழீஇய சோரியாறு ஒழிந்தது என் ஆணையும் உயர்வும் தீர்ந்தது ஆல். |
16 |
|
|
|
| |
|
|
|
|
|
4727.
| ஒற்று என வந்த அவ் ஒருவன் தன்னையும் பற்றி வெம் சிறையிடைப் படுத்தினேன் அலேன் செற்றிலன் ஊறதே எனினும் செய்திலேன் எற்று இனி வசை உரைக்கு ஈறு கூறுகேன். |
17 |
|
|
|
| |
|
|
|
|
|
4728.
| இம்பரின் இவை எலாம் இழைத்த தூதுவன் நம் பதி இகந்து போய் இலங்கை நண்ணிய மொய்ம்பு உடை யாளி மா முகவன் சாடியே அம்புதி கடந்தனன் அவனி எய்தினான். |
18 |
|
|
|
| |
|
|
|
|
|
4729.
|
கார்
பொரு மிடற்றவன் காதன் மா மகன்
வாரிதி கடந்து இவண் வந்து நம்மொடும் போர் பொர நினைகுவான் போலும் இவ் வெலாம் சாரணர் மொழிந்தனர் சரதம் ஆகும் ஆல். |
19 |
|
|
|
| |
|
|
|
|
|
4730.
| நெற்றியில் அனிகமாய் நின்ற பூதரைச் செற்று இகல் வீரரைச் செகுத்துச் சேயினை வெற்றி கொண்டு ஏனையர் தமையும் வீட்டியே மற்று ஒரு விகலை முன் வர வல்லேன் இனி யான். |
20 |
|
|
|
| |
|
|
|
|
|
4731.
| சூரன் என்று ஒரு பெயர் படைத்த தொல்லையேன் பார் இடர் தம்மொடும் பாலன் தன்னொடும் போரினை இழைத்திடல் புரிந்து வெல்லினும் வீரம் அது அன்று எனா வறிது மேவினேன். |
21 |
|
|
|
| |
|
|
|
|
|
4732.
| துய்த்திடும் திருவினில் வலியில் சூழ்ச்சியில் எத்துணைப் பெரியர் தாம் எனினும் மேலையோர் கைத்து ஒரு வினை செயக் கருதில் தம்முடை மெய்த்துணையோரை முன் வினவிச் செய்வர் ஆல். |
22 |
|
|
|
| |
|
|
|
|
|
4733.
| ஆதலின் வினவினன் யானும் ஆற்றுதல் ஈது என உரைத்திரால் என்று மன்னவன் ஓதினன் அன்னதை உணர்ந்து கைதொழூஉ மேதி அம் பெயரினான் இவை விளம்பினான். |
23 |
|
|
|
| |
|
|
|
|
|
4734.
| மேல் உயர் மாயைகள் விளைக்கும் வெற்பினை மாலினை வென்ற நின் வலிய தம்பியை ஏல ஒர் கணத்தின் முன் எறிந்த வீரனைப் பாலன் என்று உரைப்பதும் உணர்வின் பாலதோ. |
24 |
|
|
|
| |
|
|
|
|
|
4735.
| மேதக தாரக வீரன் தானையை ஆதிபர் தம்முடன் அட்ட தீரரை ஏதும் ஓர் வலியிலா எளியர் என்பதும் பூதர் என்று இகழ்வதும் புலமைப் பாலவோ. |
25 |
|
|
|
| |
|
|
|
|
|
4736.
| மீது எழு திரைக்கடல் விரைவில் பாய்ந்து நம் மூது எயில் வளநகர் முடித்து நின்னுடைக் காதலன் உயிரையும் கவர்ந்த கள்வனைத் தூதன் என்று உரைப்பதும் அறிஞர் சூழ்ச்சியோ. |
26 |
|
|
|
| |
|
|
|
|
|
4737.
| கற்றை அம் சிறை உடைக் கலுழன் ஊர்தரு கொற்றவன் திசைமுகன் அமரர் கோமகன் மற்று ஒரு வடிவமாய் வந்ததே அலால் ஒற்றுவன் நிலைமை வேறு உணரல் பாலதோ. |
27 |
|
|
|
| |
|
|
|
|
|
4738.
| உன் தனி இளவலும் ஒரு நின் ஓங்கலும் பொன்றிய காலையே புராரி மைந்தன் மேல் சென்றிலை அல்லது உன் சேனை தூண்டியும் வென்றிலை தாழ்ந்து இவண் வறிது மேவினாய். |
28 |
|
|
|
| |
|
|
|
|
|
4739.
| தீ அழல் வறியதே எனினும் சீரியோர் ஏ இது சிறிது என எள்ளல் பாலரோ வாயதன் ஆற்றலை அடக்கலார் எனின் மாயிரும் புவி எலாம் இறையின் மாய்க்கும் ஆல். |
29 |
|
|
|
| |
|
|
|
|
|
4740.
|
மாற்றலர்
சூழ்ச்சி அது எனினும் மாறதாய்
வீற்று ஒரு நிலைமையது எனினும் மேவும் உன் ஏற்று எதிர் காப்பரே என்னின் அன்னவர்க்கு ஆற்ற அரும் இடுக்கண் வந்து அடைதற் பாலதோ. |
30 |
|
|
|
| |
|
|
|
|
|
4741.
| துறந்திடா வளம் தனைத் துய்த்துச் செய்வகை மறந்தனம் ஆகியே வன்மை யாளரை எறிந்தவர் தமை இகழ்ந்து இங்ஙன் வாழ்தும் மேல் சிறந்தவர் யாம் அலால் ஏவர் சீரியோய். |
31 |
|
|
|
| |
|
|
|
|
|
4742.
| முன்னம் அக் குமரன் மேல் முனிந்து சேறியேல் உன் நகர்க்கு ஏகுமோ ஒற்று மற்று நீ அன்னது புரிந்திலை ஆடல் மைந்தனோடு இந்நகர் அழிந்தது என்று இரங்கல் பாலையோ. |
32 |
|
|
|
| |
|
|
|
|
|
4743.
| மொய்யுடை நின் முகன் முடிந்த தன்மையும் ஐய நின் திரு நகர் அழிவது ஆனதும் செய் உறு நிலைமைகள் தெரிந்து செய்திடா மையலின் கீழ்மையால் வந்த வாகும் ஆல். |
33 |
|
|
|
| |
|
|
|
|
|
4744.
| கழிந்திடு பிழையினைக் கருதி சாலவுள் அழிந்திடல் இயற்கை அன்று அறிஞர்க் காதலால் ஒழிந்தன போக ஒன்று உரைப்பன் கேண்மியா விழிந்தது என்று உன்னலை இமைப்பில் செய்தி நீ. |
34 |
|
|
|
| |
|
|
|
|
|
4745.
| ஆயது பிறவிலை அவுணர் தம்மொடு மேயின படையொடும் விரைந்து கண் நுதல் சேயினை வளைந்து அமர் செய்யப் போதியால் நீ இனித் தாழ்க்கலை நெருநல் போலவே. |
35 |
|
|
|
| |
|
|
|
|
|
4746.
| என்று இவை மேதியன் இசைப்பக் கேட்டலும் நன்று இதுவாம் என நவின்று கை யெறிந்து ஒன்றிய முறுவலும் உதிப்ப நல் அறம் கொன்றிடு துர்க்குணன் இனைய கூறுவான். |
36 |
|
|
|
| |
|
|
|
|
|
4747.
| வன்திறல் உவணன் மேல் வந்த மாயன் மேல் நின்றிடும் அமரர்மேல் நேர்ந்து போர் செயச் சென்றிலை இளையரால் திறல் கொண்டு ஏகினாய் இன்று இனிப் பாலன் மேல் ஏகல் ஆகுமோ. |
37 |
|
|
|
| |
|
|
|
|
|
4748.
| இறுதியில் ஆயுளும் இலங்கும் ஆழியும் மறு இலா வெறுக்கையும் வலியும் வீரமும் பிற உள திறங்களும் தவத்தில் பெற்றனை சிறுவனோடே அமர் செய்தற்கே கொலாம். |
38 |
|
|
|
| |
|
|
|
|
|
4749.
| மே தகு பசிப்பிணி அலைப்ப வெம்பலில் இக் காதல் கொண்டு அலமரும் கணங்கள் தம்மையும் தூதுவன் தன்னையும் தொடர்ந்து போர் செயப் போதியோ அமரரைப் புறம் கண்டு உற்று உளாய். |
39 |
|
|
|
| |
|
|
|
|
|
4750.
| இன்று நின் பெரும் படைக்கு இறைவர் யாரையும் சென்றிட விடுக்குதி சிறிது போழ்தினில் குன்று எறி பகைஞனைக் கூளி தம்மொடும் வென்று இவண் மீள்குவர் வினையம் ஈது என்றான். |
40 |
|
|
|
| |
|
|
|
|
|
4751.
|
கருதிடு
துர்க்குணக் கயவன் இன்னன
உரை தரு முடிவினில் ஒழிக இங்கு எனாக் கரு மணி ஆழி அம்கை அமைத்தரோ தரும வெம் பகை உடை அமைச்சன் சாற்றுவான். |
41 |
|
|
|
| |
|
|
|
|
|
4752.
| குலம் படு நவமணி குயின்று பொன்புனை அலம் படை கொண்டு புன் முதிரை ஆக்கத்தால் புலம் படக் கீறுவ போலும் வீர நீ சிலம்படி மைந்தனோடு ஆடல் செய்வதே. |
42 |
|
|
|
| |
|
|
|
|
|
4753.
| மேல் உயர் கண் நுதல் விமலன் அன்று எனின் ஆலவன் அன்று எனின் அயனும் அன்று எனில் காலனும் அன்று எனில் காவல் வீர நீ பாலனொடு அமர் செயின் பயன் உண்டாகுமோ. |
43 |
|
|
|
| |
|
|
|
|
|
4754.
| மன் இளம் குதலை வாய் மதலை மீதினும் இன்னினி அமர் செய இறத்தி என்னினும் அன்னவன் நினது பேர் ஆற்றல் காண்பன் ஏல் வென்னிடும் எதிர்ந்து போர் விளைக்க வல்லனோ. |
44 |
|
|
|
| |
|
|
|
|
|
4755.
| நேர் அலர் தங்களை நேர்ந்து உளார் எனப் பேர் இகல் ஆற்றியே பெரிது மாய்வதும் பூரியர் கடன் அலால் புலமைக்கு ஏற்பதோ சீரியர் கடன் அவை தெரிந்து செய்வதே. |
45 |
|
|
|
| |
|
|
|
|
|
4756.
| எரிமுகன் இரணியன் எனும் உன் மைந்தரில் ஒருவனுக்கு ஆற்றலர் இலக்கத்து ஒன்பது பொரு திறல் வயவரும் பூதர் யாவரும் அரன் அருள் புரிதரும் அறு முகத்தனும். |
46 |
|
|
|
| |
|
|
|
|
|
4757.
| கீள் கொடு நகம் கொடு கிள்ளும் ஒன்றினை வாள் கொடு தடியுமோ வன்மை சான்றது ஓர் ஆள் கொடு முடித்திடும் அவரை வென்றிட நீள் கொடு மரம் கொடு நீயும் சேறியோ. |
47 |
|
|
|
| |
|
|
|
|
|
4758.
| மாண் இமை கூடு உறா மகவு தன்னொடும் ஏண் அறு சாரதர் இனங்கள் தம்மொடும் பூணுதி செரு எனும் புகற்சி கேட்பர் ஏல் நாணுவர் நமர் எலாம் நகுவர் தேவரும். |
48 |
|
|
|
| |
|
|
|
|
|
4759.
| பொற்றையை முடித்தனன் பொருவு இல் தம்பியைச் செற்றனன் என்று இளம் சிறுவன் தன்னையும் வெற்றி கொள் புதல்வனை வீட்டினான் எனா ஒற்றையும் மதித்தனை தொன்மை உன்னலாய். |
49 |
|
|
|
| |
|
|
|
|
|
4760.
| ஆறு அணி செம் சடை அண்ணல் தந்திடும் பேறு உடை வேலினைப் பிள்ளை உய்த்தலும் மாறு உள படையினான் மாற்றல் ஆமையால் ஈறது வாயினன் இளவல் தாரகன். |
50 |
|
|
|
| |
|
|
|
|
|
5761.
| எல்லை மற்று அன்னதின் எல்லை தன் பகை கல் உயர் மொய்ம்பன் மாகாயன் என்பது ஓர் வல் அவுணன் தனை வருதி என்று கூய் ஒல்லையின் இனையது ஒன்று உரைத்தல் மேயினான். |
415 |
|
|
|
| |
|
|
|
|
|
5762.
|
சேய்
உயர் வட மதில் சிகரி தன் இடைப்
போயினை அந் நெறி புரத்தியால் எனா ஆயிரப் பத்து எனும் அனிக வெள்ளமோடு ஏயினன் தான் உறும் இருக்கை எய்தினான். |
416 |
|
|
|
| |
|
|
|
|
|
5763.
| அத் துணை ஏகியே அவுணர் கம்மியன் உத்தர நெடு மதில் ஓங்கு கோபுரம் சித்திர உறுப்பொடு சித்தத்து உன்னியே வித்தக வன்மையால் விதித்துப் போகவே. |
417 |
|
|
|
| |
|
|
|
|
|
5764.
| அடு கரி புரவி தேர் அவுணர் தானை ஆம் கடலுடன் சென்று மா காயன் என்பவன் வட மதில் சிகரியின் வாய்தல் போற்றியே சுடர்கெழு தீபிகை சுற்ற வைகினான். |
418 |
|
|
|
| |
|
|
|
|
|
5765.
| ஆயது நிகழ் உழி ஆழி வெற்பின் வாய் ஞாயிறு நணுக நள் இருளின் யாம் இனி போயது மெய்ப்புலன் புந்தி சேர் உழி மாயை அது அகன்றிடும் வண்ணம் என்னவே. |
419 |
|
|
|
| |
|
|
|
|
|
5766.
| கங்குல் என்று உரை பெறு கடவுள் கற்பு உடை நங்கையை மேவுவான் நயப்பு மேல் கொளா அங்கு அவளைத் தொடர்ந்து அணுகுவான் எனச் செம் கதிர் அண்ணல் கீழ்த் திசையில் எய்தினான். |
420 |
|
|
|
| |
|
|
|
|
|
5767.
|
இரவி வந்து உற்றுழி எழுந்து சூர் மகன்
மரபுளி நாள் கடன் வழாமல் ஆற்றியே செருவினில் உடைந்திடும் சிறுமை சிந்தியாப் பொரு வரு மாயையைப் போற்றல் மேயினான். |
1 |
|
|
|
| |
|
|
|
|
|
5768.
| போற்றினன் முன் உறு பொழுதின் மாயவள் கோல் தொழில் கன்றிய குமரன் முன்னரே தோற்றினள் நிற்றலும் தொழுத கையினன் பேற்றினை உன்னியே இனைய பேசுவான். |
2 |
|
|
|
| |
|
|
|
|
|
5769.
| தாதை தன் அவ்வை கேள் சண்முகத்தவன் தூதுவனோடு போர்த் தொழிலை ஆற்றினேன் ஏதம் இல் மானமும் இழந்து சாலவும் நோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன். |
3 |
|
|
|
| |
|
|
|
|
|
5770.
| துன்னலரோடு போர் தொடங்கி ஈற்றினில் பின்னிடுவார் பெறும் பிழையும் பெற்றனன் என் இனி வரும் பழி இதற்கு மேல் என்றான் அன்னது மாயை கேட்டு அறைதல் மேயினாள். |
4 |
|
|
|
| |
|
|
|
|
|
5771.
| மறை நெறி விலக்கினை வான் உளோர் தமைச் சிறை இடை வைத்தனை தேவர் கோமகன் முறையினை அழித்தனை முனிவர் செய்தவம் குறை உறுவித்தனை கொடுமை பேணினாய். |
5 |
|
|
|
| |
|
|
|
|
|
5772.
| ஓவரும் தன்மையால் உயிர்கள் போற்றிடும் மூவரும் பகை எனின் முனிவர் தம்மொடு தேவரும் பகை எனின் சேணில் உற்று உளோர் ஏவரும் பகை எனின் எங்ஙன் வாழ்தி ஆல். |
6 |
|
|
|
| |
|
|
|
|
|
5773.
| பிழைத்திடும் கொடு நெறி பெரிதும் செய்தலால் பழித் திறம் பூண்டனை பகைவர் இந்நகர் அழித்து அமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார். |
7 |
|
|
|
| |
|
|
|
|
|
5774.
| நூற்று இவண் பல பல நுவலின் ஆவது என் மாற்ற அரும் திறல் உடை மன்னன் மைந்த நீ சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும் ஆற்றவும் மகிழ் சிறந்து அனையன் கூறுவான். |
8 |
|
|
|
| |
|
|
|
|
|
5775.
| நின்று அமர் இயற்றியே நென்னல் என்றனை வென்றனன் ஏகிய வீர வாகுவை இன்று அனிகத் தொடும் ஈறு செய்திட ஒன்று ஒரு படையினை உதவுவாய் என்றான். |
9 |
|
|
|
| |
|
|
|
|
|
5776.
| அடல் வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன கெடல் அரும் மாயவள் கேட்டுத் தன் ஒரு படையினை விதித்து அவன் பாணி நல்கியே கடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள். |
10 |
|
|
|
| |
|
|
|
|
|
5777.
| மற்று இது விடுத்தியால் மறையில் கந்தவேள் ஒற்றனைப் பிறர் தமை உணர்வை வீட்டியே சுற்றிடும் வாயுவின் தொழிலும் செய்யும் ஆல் இற்றையில் சயம் உனதே ஏகுவாய் என்றாள். |
11 |
|
|
|
| |
|
|
|
|
|
5778.
| உரைத்து இவை மாயவள் உம்பர் போந்துழி வரத்தினில் கொண்டிடும் மாய மாப்படை பரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே பெருத்திடும் பெருமிதப் பெற்றி கூடினான். |
12 |
|
|
|
| |
|
|
|
|
|
5779.
| கூர்ப்புறு பல்லவம் கொண்ட தூணியைச் சீர்ப்புறத்து இறுக்கி மெய் செறித்துச் சாலிகை கார்ப்பெரும் கொடு மரம் கரம் கொண்டு இன்னது ஓர் போர்ப் பெரும் கருவிகள் புனைந்து தோன்றினான். |
13 |
|
|
|
| |
|
|
|
|
|
5780.
| கால் படை அழல் படை காலன் தொல் படை பாற் படு மதிப்படை பரிதியோன் படை மால் படை அரன் படை மலர் அயன் படை மேல் படு சூர் மகன் எடுத்தல் மேயினான். |
14 |
|
|
|
| |
|
|
|
|
|
6781.
|
என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலர் ஓடித் துன்னார் களத்தில் துணிவுற்ற சீர் மதலை பொன்னார் உடலம் கொடு புலம்பிப் போந்தனரால். |
178 |
|
|
|
| |
|
|
|
|
|
6782.
| சேந்த குஞ்சித் சிலதர் செஞ் ஞாயிறு பாய்ந்த அண்ணல் படிவ மிசைக் கொளா வேந்தன் முன் உற உய்த்து விரைந்தவன் பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார். |
179 |
|
|
|
| |
|
|
|
|
|
6783.
| அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே தண்டகம் செய் தனிக் குடை மன்னவன் துண்டம் ஆகிய தோன்றல் தன் யாக்கையைக் கண்டு அரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். |
180 |
|
|
|
| |
|
|
|
|
|
6784.
| அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால் பற்று நல் எழில் பார்த்திடும் கண்களில் ஒற்றும் முத்தம் உதவும் உரன் இலாப் புற்று அராவில் உயிர்க்கும் புரளுமால். |
181 |
|
|
|
| |
|
|
|
|
|
6785.
| துஞ்சல் ஆகித் துணிவுற்றும் தெவ்வர் மேல் நெஞ்சு கொண்ட நெடுஞ்சினம் தீர்கிலை விஞ்சு மானமும் வீரமும் வன்மையும் எஞ்சுமே கொல் இனி உன்னொடு என்னுமால். |
182 |
|
|
|
| |
|
|
|
|
|
6786.
| கையில் ஒன்றைக் கதும் எனப் பற்றிடாச் செய்ய கண்படு செம்புனல் ஆட்டியே வெய்யவன் கொடு விண்ணினும் தந்தகை ஐய ஈது கொலோ என்று அரற்றுமே. |
183 |
|
|
|
| |
|
|
|
|
|
6787.
|
வாள்
அரம் படு வாளிகள் மூழ்கலில்
சாளரங்கள் எனப் புழை தாங்கிய தோளை மார்பினை நோக்கும் தொலைவு இலா ஆளை நீ அலது ஆர் உளரே எனும். |
184 |
|
|
|
| |
|
|
|
|
|
6788.
| பாறு உலாய பறந்தலை தன் இடை வேறு வேறு அது நின் மெய்யினைக் கூறு செய்து அவன் ஆவி குடித்தலால் ஆறுமோ என் அகத்துயர் என்றிடும். |
185 |
|
|
|
| |
|
|
|
|
|
6789.
| மூண்ட போர்த்தொழில் முற்றிய என் மகன் ஈண்டு வந்தது ஒர் தூதுவன் எற்றிட மாண்டு உளான் என்று உரைத்திடின் மற்றியான் ஆண்ட பேர் அரசு ஆற்றல் நன்றே எனும். |
186 |
|
|
|
| |
|
|
|
|
|
6790.
| சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மை போல் பொருத்தி நோக்கிப் புரளும் என் புந்தியை வருத்தும் ஆகுலம் மற்று அது கண்டு நீ இருத்தியோ உயிரே இன்னும் என்றிடும். |
187 |
|
|
|
| |
|
|
|
|
|
6791.
| மருளும் அங்கை மறிக்கும் மதலையை அருளின் நோக்கி அழும் விழும் சோர்வுறும் புரளும் வாயில் புடைக்கும் புவியிடை உருளும் நீட உயிர்க்கும் வியர்க்குமே. |
188 |
|
|
|
| |
|
|
|
|
|
6792.
| மன்னர் மன்னவன் மற்று இது பான்மையால் இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல் கன்னி மா நகர்க் காப்பினுள் வைகிய அன்னை கேட்டனள் ஆகும் எய்தினாள். |
189 |
|
|
|
| |
|
|
|
|
|
6793.
| நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடு மயிர் குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள் அலைத்த உந்தியுள் ஆற்ற அரும் துன்பினள் வலைத் தலைப் படு மஞ்ஞையின் ஏங்கினாள். |
190 |
|
|
|
| |
|
|
|
|
|
6794.
| அல்லல் கூர்ந்த அவுணன் தன் காதலி தொல்லை வைகிய சூழலை நீங்கியே இல்லை ஆகிய என் மகன் காண்பன் என்று ஒல்லை ஆவலித்து ஓடினள் ஏகினாள். |
191 |
|
|
|
| |
|
|
|
|
|
6795.
| மா வலிக்கு மடங்கல் ஒப்பான் தனிக் காவலிக்குத் துயர் வந்த கன்னிமீர் நாவல் இக்கணம் நண்ணுதிர் என்று கூய் ஆவலித்தனர் ஆயிழைமார் எலாம். |
192 |
|
|
|
| |
|
|
|
|
|
6796.
| வாங்கு பூ நுதல் மன்னவன் தேவி தன் பாங்கர் மங்கையர் பற்பலரும் குழீஇக் கோங்கம் அன்ன முலை முகம் கொட்டியே ஏங்கியே துயர் எய்தி இரங்கினார். |
193 |
|
|
|
| |
|
|
|
|
|
6797.
| இந்திரைக்கு நிகர் வரும் ஏந்திழை அந்தம் இல்லது ஒர் ஆயிழை மாரொடு முந்தி யேகி முடிந்து துணிந்திடு மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள். |
194 |
|
|
|
| |
|
|
|
|
|
6798.
|
மயங்கினாள்
பின் மனம் தெளிவு எய்தினாள்
உயங்கினாள் மிக ஓ என்று அரற்றினாள் தியங்கினாள் உரும் ஏறு திளைத்திடு புயங்கம் என்னப் புரண்டு புலம்பினாள். |
195 |
|
|
|
| |
|
|
|
|
|
6799.
|
வெய்யோன் என்று ஊழ் தீண்டுதலோடும் விண்ணில் போய்
கையோடு அன்னாற் பற்றினை வந்து என் கண் முன்னம்
மொய்யோடு அன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக்கு இன்று இரையாவது அறியேனே. |
196 |
|
|
|
| |
|
|
|
|
|
6800.
| பண்டே வானம் செந்தழல் மூட்டிப் பகை முற்றும் கொண்டே சென்றாய் அப்பகல் உன்றன் கோலத்தைக் கண்டேன் இன்றே இக்கிடை தானும் காண்பேனோ விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. |
197 |
|
|
|
| |
|
|
|
|
|
4801.
|
பெற்றிடு திருவினில் பிறந்த வெம்சினம்
கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது முற்று உறுகின்றதன் முன்னம் அன்பினோர் உற்றன கூறியே உணர்த்தல் வேண்டும் ஆல். |
91 |
|
|
|
| |
|
|
|
|
|
4802.
| மன்னவர் செவி அழல் மடுத்ததாம் என நன் நெறி தருவது ஓர் நடுவு நீதியைச் சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர் ஒன்னலர் விழைந்தவாறு உரைக்கின்றார் களே. |
92 |
|
|
|
| |
|
|
|
|
|
4803.
| முற்று உற வருவது முதலும் அன்னது ஆல் பெற்றிடு பயன்களும் பிறவும் தூக்கியே தெற்றென உணர்ந்து பின் பலவும் செய்வர் ஏல் குற்றம் ஒன்று அவர் வயின் குறுக வல்லதோ. |
93 |
|
|
|
| |
|
|
|
|
|
4804.
| மால் வரு தொடர்பினால் வனத்துச் செல்லுமீன் கோல் வரும் உணவினைக் குறித்து வவ்வியே பால் வரு புணர்ப்பினில் படுதல் போல நீ மேல் வருகின்றதை வினவல் செய்கிலாய். |
94 |
|
|
|
| |
|
|
|
|
|
4805.
| இந்திரன் ஆதி ஆம் இறைவர் தங்களை அந்தரத்து அமரரை அலைத்த தீயவர் முந்து உறு திருவொடு முடிந்தது அல்லதை உய்ந்து உளர் இவர் என உரைக்க வல்லமோ. |
95 |
|
|
|
| |
|
|
|
|
|
4806.
|
தேவர்கள்
யாரையும் திரை கொள் வேலையின்
மேவரு மீன்தொகை விரைவிற்று அம் என ஏவினை இனிது கொல் இனிய செய்கை தம் ஆவியில் விருப்பு இலார் அன்றி யார் செய்வார். |
96 |
|
|
|
| |
|
|
|
|
|
4807.
| அறை கழல் வாசவற்கு அலக்கண் ஆற்றியே இறையினை அழித்தனை இருந்த மாநகர் நிறை தரு வளன் எலாம் நீக்கு வித்தனை சிறை இடை உய்த்தனை தேவர் யாரையும். |
97 |
|
|
|
| |
|
|
|
|
|
4808.
| அத்தகு தேவரால் ஐய நங்களுக்கு இத்துணை அலக்கண் வந்து எய்திற்று இங்கு இது மெய்த் திறம் ஆம் என விரைந்து உள் கொள்ளலை பித்தரின் மயங்கினை பேதை ஆயினாய். |
98 |
|
|
|
| |
|
|
|
|
|
4809.
| பொன் நகர் அழிந்த நாள் புகுந்த தேவரை இன்னமும் விட்டிலை இரக்கம் நீங்கினாய் அன்னதற்கு அல்லவோ ஆறு மாமுகன் உன்னுடன் போர் செய உற்ற தன்மையே. |
99 |
|
|
|
| |
|
|
|
|
|
4810.
|
பேறு தந்திடு பிஞ்ஞகன் பெரும் திருவுடன் நீர்
நூறு தன்னுடன் எட்டுகம் இரும் என நுவன்றான் கூறுகின்றது ஓர் காலமும் குறுகியது அதனைத் தேறுகின்றிலை விதி வலி யாவரே தீர்ந்தார். |
100 |
|
|
|
| |
|
|
|
|
|
4811.
| எத் திறத்தரும் நுங்களை வெல்கிலர் எமது சத்தி வென்றிடும் என்றனன் கண் நுதல் தலைவன் அத் திறத்தினால் அல்லவோ அறுமுகக் குமரன் உய்த்த செய்ய வேல் உண்டது தாரகன் உயிரை. |
101 |
|
|
|
| |
|
|
|
|
|
4812.
| பேதை வானவர் தங்களைச் சிறை இடைப் பிணித்தாய் ஆதலால் உனக்கு ஆனது என் துன்பமே அல்லால் ஏதும் ஓர் பயன் இல்லது ஓர் சிறு தொழில் இயற்றி வேதனைப் படுகின்றது மேலவர் கடனோ. |
102 |
|
|
|
| |
|
|
|
|
|
4813.
| குரவரைச் சிறு பாலரை மாதரைக் குறைதீர் விரத நல் தொழில் பூண்டு உளோர் தம்மை மேல் அவரை அரு மறைத் தொழிலாளரை ஒறுத்தனர் அன்றோ நிரய முற்றவும் சென்று சென்று அலமரும் நெறியோர். |
103 |
|
|
|
| |
|
|
|
|
|
4814.
| அமரர் தம் பெரும் சிறையினை நீக்குதி ஆயின் குமர நாயகன் ஈண்டு போர் ஆற்றிடக் குறியான் நமது குற்றமும் சிந்தையில் கொள்ளலன் நாளை இமை ஒடுங்கு முன் கயிலையின் மீண்டிடும் எந்தாய். |
104 |
|
|
|
| |
|
|
|
|
|
4815.
| சிட்டர் ஆகியே அமர் தரும் இமையவர் சிறையை விட்டிடாது நீ இருத்தியேன் மேவலர் புரங்கள் சுட்ட கண்நுதல் குமரன் நம் குலம் எலாம் தொலைய அட்டு நின்னையும் முடித்திடும் சரதம் என்று அறைந்தான். |
105 |
|
|
|
| |
|
|
|
|
|
4816.
|
தடுத்து மற்று இவை உரைத்தலும் வெய்ய சூர் தடக்கை
புடைத்து வெய்து உயிர்த்து உரப்பியே நகை நிலாப் பொடிப்பக்
கடித்து மெல் இதழ் அதுக்கி மெய் பொறித்திடக் கனன்று
முடித்தன் இத்தலை துளக்கியே இன்னன மொழிவான். |
106 |
|
|
|
| |
|
|
|
|
|
4817.
|
ஏவல்
தொண்டு செய்து இன்னமும் கரந்த இந்திரற்கும்
தேவர்க்கும் சிறு பாலற்கும் சிவன் உறை கயிலைக்
காவல் பூதர்க்கும் அஞ்சினை கருத்து அழிந்தனையோ
மூவர்க்கும் வெலற்கு அரியது ஓர் மொய்ம்பு கொண்டு உடையோய்.
|
107 |
|
|
|
| |
|
|
|
|
|
4818.
| எல்லை நாள் வரை இழைத்தலும் எம் பெரும் சத்தி வெல்லும் நுங்களை என்றதும் கண் நுதல் விமலன் சொல்ல யான் முன்பு கேட்டிலன் வஞ்சமும் சூழ்வும் வல்லை வல்லை கொல் எம்பி நீ புதிது ஒன்று வகுத்தாய். |
108 |
|
|
|
| |
|
|
|
|
|
4819.
| நூற்றின் மேலும் ஓர் எட்டு உக நுவல் அரும் திருவின் வீற்று இருந்து அரசு இயற்றுதிர் என்னினும் மேல் நாள் ஆற்றினைச் சடை வைத்தவன் கொடுத்திடும் அழியாப் பேற்றை யாவரே விலக்குவார் அது பிழை படுமோ. |
109 |
|
|
|
| |
|
|
|
|
|
4820.
|
ஆதிநாயகன் எம் பெரும் சத்தியே அல்லால்
ஏதிலார் வெலார் என்னினும் சத்தியும் இறையும் பேதமோ வரம் கொடுத்தவன் அடும் என் கை பிழையே ஓதலால் ஆவது ஓர் வழக்கமே உண்மையது அன்று ஆல். |
110 |
|
|
|
| |
|
|
|
|
|
4821.
| பழுது உறாது நம் போலவே வேள்வியைப் பயிலாது அழிவு இலா வரம் பெற்றிலன் தாரகன் அதனால் ஒழிவது ஆயினன் வச்சிர வாகுவும் உணர்வு இல் குழவி ஆதலின் மாய்ந்தனன் ஈது கொல் குறையே. |
111 |
|
|
|
| |
|
|
|
|
|
4822.
|
அண்டம் ஆயிரத்து எட்டையும் தனி அரசாட்சி
கொண்டு வைகினன் குலத்தொடும் அமரர் தம் குழுவைத்
தொண்டு கொண்டனன் யாவர் வந்து எதிர்க்கினும் தொலையேன்
உண்டு கொல் இவண் எனக்கு நேர் ஆகவே ஒருவர். |
112 |
|
|
|
| |
|
|
|
|
|
4823.
| தவம் உயன்று உழல் அமரரின் அரக்கர்கள் தம்மின் அவுணர் தங்களின் ஆயிரத்து எட்டு எனும் அண்டம் புவனம் முற்றவும் ஒரு தனி ஆழியால் புரந்தே எவர் எனக்கு நேர் ஆகவே அழிவு இலாது இருந்தார். |
113 |
|
|
|
| |
|
|
|
|
|
4824.
| மால் அயன் முதல் ஆகிய முதுவர்கள் வரம்பு இல் காலமாக யான் அமரரைச் சிறை செயக் கண்டும் சால என் தனக்கு அஞ்சியே இருந்தனர் தனியோர் பாலனே கொலாம் அழிவு இலா என் உயிர் படுப்பான். |
114 |
|
|
|
| |
|
|
|
|
|
4825.
| வேறுபாடு உறா வச்சிரப் படிவமும் மிடலும் ஈறு இலாதது ஓர் ஆயுளும் பெற்றிடும் என்னை ஊறு தான் செயக் கூடுறாது ஒருவர்க்கும் என்றான் மாறு போர் செய்து பாலனோ எனை அட வல்லான். |
115 |
|
|
|
| |
|
|
|
|
|
4826.
| எண் இலாதது ஓர் பாலகன் எனை வெல்வன் என்கை விண் இலாதவன் தன்னை ஓர் கனி என வெஃகிக் கண் இலாதவன் காட்டிடக் கை இலாதவன் போய் உண்ணிலாத பேர் ஆசையால் பற்று மாறு ஒக்கும். |
116 |
|
|
|
| |
|
|
|
|
|
4827.
| என்று மற்று இவை சூரபன்மா இசைத்திடலும் துன்று பஃறலைச் சீயமா முகம் உடைத் துணைவன் நன்று நன்று என வினவியே இன்னமும் நான் இங்கு ஒன்று கூறுவன் முனியலை கேட்டி என்று உரைப்பான். |
117 |
|
|
|
| |
|
|
|
|
|
4828.
|
வாலிதாம்
மதிச் சடிலமும் பவள மால் வரையே
போலும் மேனியும் முக்கணும் நால் பெரும் புயமும் நீல மா மணிக் கண்டமும் கொண்டு நின்றனன் ஆல் மூல காரணம் இல்லது ஓர் பரா பர முதல்வன். |
118 |
|
|
|
| |
|
|
|
|
|
4829.
|
தன்னை நேர் இலாப் பரம் பொருள் தனிஉருக் கொண்டது
என்ன காரணம் என்றியேல் ஐந் தொழில் இயற்றி முன்னை ஆர் உயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப் பின்னை வீடு பேறு அருளுவான் நினைந்த பேர் அருளே. |
119 |
|
|
|
| |
|
|
|
|
|
4830.
|
அப்பரன் தனை உன்னியே அளவை தீர் காலம்
மெய்ப் பெரும் தவம் இயற்றினை அது கண்டு வெளிப்பட்டு
ஒப்பு இலா வரம் உதவியே ஆங்கு அதற்கு ஒழிவும்
செப்பி வைத்தனன் தேர்ந்திலை போலுமத்திறனே. |
120 |
|
|
|
| |
|
|
|
|
|
4831.
| பெறல் அரும் திரு உடைய நீ அறத்தினைப் பேணி முறை புரிந்திடாது ஆற்றலால் அமரரை முனிந்து சிறையில் வைத்தனை அது கண்டு நின் வலி சிந்தி இறுதி செய்திட உன்னினன் யாவர்க்கும் ஈசன். |
121 |
|
|
|
| |
|
|
|
|
|
4832.
|
வரம் அளித்த யாம் அழிப்பது முறை அன்று வரத்தால்
பெருமை பெற்று உள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிது எனப் பரன் உன்னியே தன் உரு ஆகும்
ஒரு மகன் கொடு முடித்தும் என்று உன்னினான் உளத்தில்.
|
122 |
|
|
|
| |
|
|
|
|
|
4833.
| செம் நிறத் திருமேனியும் திரு முகம் ஆறும் அன்னதற்கு இருதொகை உடைத் தோள்களும் ஆக முன்னவர்க்கு முன்னான் ஆகிய பரா பர முதல்வன் தன் நுதல் கணால் ஒரு தனிக் குமரனைத் தந்தான். |
123 |
|
|
|
| |
|
|
|
|
|
4834.
| மானுடத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும் ஊனம் உற்று உழல் யாக்கையில் பிறந்து உளார் ஒப்ப நீ நினைக்கலை பரம் சுடர் நெற்றி அம் தலத்தே தான் உதித்தனன் மறைகளும் கடந்த ஓர் தலைவன். |
124 |
|
|
|
| |
|
|
|
|
|
4835.
| சீலம் இல்லவர்க்கு உணர ஒண்ணாத சிற்பரனைப் பாலன் என்றனை அவன் இடத்தில் பல பொருளும் மேலை நாள் வந்து தோன்றிய சிறியது ஓர் வித்தின் ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித்தது போல். |
125 |
|
|
|
| |
|
|
|
|
|
4836.
| அருவு மாகுவன் உருவமும் ஆகுவன் அருவும் உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின் கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய் பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடல் பாலார். |
126 |
|
|
|
| |
|
|
|
|
|
4837.
| வேதக் காட்சிக்கும் உபநிடத்து உச்சியில் விரித்த போதக் காட்சிக்கும் காணலன் புதியரில் புதியன் மூதக் கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக்கு ஆதியாய் உயிர்க்கு உயிராய் நின்ற அமலன். |
127 |
|
|
|
| |
|
|
|
|
|
4838.
| ஞானம் தான் உருவாகிய நாயகன் இயல்பை யானும் நீயும் ஆய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ மோனம் தீர்கலா முனிவரும் தேற்றிலர் முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தலைமை. |
128 |
|
|
|
| |
|
|
|
|
|
4839.
|
தத்த
மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலரும்
கத்து புன் சொலை வினவினர் அவன் செயல் காணார் சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி உய்த்து உணர்ந்திடு நீர் அரே ஒரு சிறிது உணர்வார். |
129 |
|
|
|
| |
|
|
|
|
|
4840.
| கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப் பொருள் எனப்படு நான்மையும் ஐவகைப் பொறியும் இரு திறத்து இயல் வினைகளும் காலமும் இடனும் மரபின் முற்று உறு பயனுமாய் நின்றவன் வள்ளல். |
130 |
|
|
|
| |
|
|
|
|
|
4841.
| ஞாலம் உள்ளது ஓர் பரம் பொருள் நாம் எனப் புகலும் மாலும் வேதனும் மாயை ஆம் வரம்பினுள் பட்டார் மூலம் ஆகிய தத்துவ முழுவதும் கடந்து மேல் உயர்ந்திடு தனி முதல்வன் அன்றிவேறு ஆர். |
131 |
|
|
|
| |
|
|
|
|
|
4842.
| தூய பார் முதல் ஆகவே குடிலையின் துணையும் மேய அண்டமும் உயிர்களும் வியன் பொருள் பலவும் மாயும் நின்றனன் அல்லனும் ஆயினன் அவன் தன் மாயை யாவரே கடந்தனர் மறைகளும் மயங்கும். |
132 |
|
|
|
| |
|
|
|
|
|
4843.
|
இன்ன தன்மை சேர் முதல்வனைச் சிறுவன் என்று இகழ்ந்து
பன்னு கின்றனை அவுணர் தம் கிளை எலாம் படுத்து
நின்னையும் தடிந்திடுவன் ஓர் இமைப்பினின் இரப்பும்
தன் அருள் திறம் காட்டுவான் வந்தனன் சமர்மேல். |
133 |
|
|
|
| |
|
|
|
|
|
4844.
| அற்றம் இல்வகை ஆயிரத்து எட்டு எனும் அண்டம் பெற்றனம் என வியந்தனை தத்துவ பேதம் முற்றும் உணர்ந்திலை தரணியோ அளப்பில உளகாண் மற்றை அண்டங்கள் கேட்டியேல் மருளுதி மன்னோ. |
134 |
|
|
|
| |
|
|
|
|
|
4845.
| குடிலை ஈறதா வாரியே முதலாதாக் குழுமி உடைய அண்டங்கள் அலகில என்பர் ஒன்று ஒன்றின் அடைதல் உற்றிடு புவனத்தின் பெருமை யார் அறிந்தார் முடிவு உறாதது ஓர் பொருளினை முடிவு கூற அற்றோ. |
135 |
|
|
|
| |
|
|
|
|
|
4846.
| அன்ன ஆகிய அண்டங்கள் அனந்த கோடியையும் தன்னது ஆணையால் ஓர் இமைப் பொழுதினில் தரவும் பின்னர் மாற்றவும் வல்லது ஓர் ஆதி அம் பிரான் காண் உன்னொடே பொரும் ஆடலால் செந்தி வந்து உற்றான். |
136 |
|
|
|
| |
|
|
|
|
|
4847.
| வச்சிரத் தனி யாக்கை பெற்றனம் என மதித்தாய் இச் சிரத்தையை விடுமதி இருவினைக்கு ஈடா அச் செடுத்திடும் உயிர்கள் மாய்ந்திடும் என அறிஞர் நிச்சயித்தனர் முடிவு உறாது இருத்தி கொல் நீயே. |
137 |
|
|
|
| |
|
|
|
|
|
4848.
| பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர் இருமை பெற்றிடு காயமும் இறந்திடும் திண்ணம் பருமிதத்து நின் வச்சிர யாக்கையும் பாரின் உரிமை பெற்று உளது ஆதலான் அழிவு இன்றி உறுமோ. |
138 |
|
|
|
| |
|
|
|
|
|
4849.
| அழிவு இல் மெய் வரம் பெற்றனம் என்றனை அதற்கு மொழிதரும் பொருள் கேண் மதி முச்சகம் தன் உள் கெழிய மன் உயிர் போல் சில வைகலில் கெடாது கழி பெரும் பகல் இருந்திடும் பான்மையே கண்டாய். |
139 |
|
|
|
| |
|
|
|
|
|
4850.
|
அச்சுதன்
அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம் படு முகமனே ஆன போல் நினது வச்சிரத் தனி யாக்கையும் அழிவு இலா வரமும் முச்சகம் தொழப் பல் உகம் இருத்தலாய் முடியும். |
140 |
|
|
|
| |
|
|
|
|
|
4851.
|
வான் செய் தேவரை நீ அலைக் கின்றதை மதியா
ஊன் செய்கின்ற பல் உயிர்க்கும் உயிரது ஆம் ஒருவன்
தான் செய்கின்ற தொல் வரத்தினைத் தான் தவிர்த்திடுமேல்
ஏன் செய்தாய் என வினவியே நிறுவுவார் எவரே. |
141 |
|
|
|
| |
|
|
|
|
|
4852.
| கெடுதல் இல்லது ஓர் வளனொடு நீயும் நின் கிளையும் படுதல் இன்றியே வாழ்தி என்று இன்னன பகர்ந்தேன் இடுதல் கொண்டிடு சிறை இடைத் தேவரை இன்னே விடுதல் செய்குதி என்றனன் அறிஞரின் மிக்கான். |
142 |
|
|
|
| |
|
|
|
|
|
4853.
| இன்ன பான்மையான் மடங்கல் அம் பெருமுகத்து இளவல் சொன்ன வாசகம் வினவியே மணி முடி துளக்கிக் கன்ன மூடு செம் கனல் செறித்தால் எனக் கனன்று முன்னை ஆகியோன் பின்னரும் சில சில மொழிவான். |
143 |
|
|
|
| |
|
|
|
|
|
4854.
| காற்றில் தள்ளுண்டு நெருப்பினில் சூடுண்டு கங்கை ஆற்றில் தாக்குண்டு சரவணம் புக்கு அலையுண்டு வேற்றுப் பேர் முலை உண்டு அழுதே விளையாடும் நேற்றைப் பாலனையோ பரம் பொருள் என நினைந்தாய். |
144 |
|
|
|
| |
|
|
|
|
|
4855.
|
பிரமம் ஆகிய ஒரு பொருள் உயிர் எனப் பேர் பெற்று
உருவம் எண் இல கொண்டு தன்மாயை யால் உலப்பு இல் கரும பேதங்கள் ஆற்றிடும் பல் புனல் கடத்துள் இரவி தன் உருத் தனித் தனி காட்டிய இயல்பின். |
145 |
|
|
|
| |
|
|
|
|
|
4856.
|
கடம் தகர்ந்துழி அவற்றிடை வெளி ககனத் தோடு
அடைந்தவாறு போல் யாக்கையின் பேதகம் அனைத்தும்
முடிந்த காலையில் தொன்மைபோல் அபேதம் ஆம் மொழிக்கும்
தொடர்ந்த சிந்தைக்கும் நாட ஒணாது அமர் பெரும் சோதி.
|
146 |
|
|
|
| |
|
|
|
|
|
4857.
| பிரமமே இவர் அல்லவர் இவர் எனப் பேதித்து இருமை ஆகவே கொள்ளலை யாக்கையே வேறு பரமம் ஆகிய உயிர் எலாம் ஒன்று பல் பணியும் பொருளது ஆகிய ஒருமையாய் முடிந்தவா போல. |
147 |
|
|
|
| |
|
|
|
|
|
4858.
| விறலும் வன்மையும் இல்லவர் தாழ்வர் மேதக்க நெறியர் ஓங்குவர் ஈது உலகத்து இடை நிகழ்ச்சி இறுதி இல்லது ஓர் பெரியன் யான் அறுமுகன் என்போன் சிறியன் ஆதலின் அவனை யான் வெல்குவன் திண்ணம். |
148 |
|
|
|
| |
|
|
|
|
|
4859.
|
தொகைமை சான்ற நம் குரவர் பல்லோர் உயிர் தொலைத்த
பகைஞர் ஆதலின் அமரரைச் சிறை இடைப் படுத்தேன்
மிகை செய்தார் களை நாடியே வேந்து ஒறுத்திடுதல்
தகைமையே என மனுமுறை நூல்களும் சாற்றும். |
149 |
|
|
|
| |
|
|
|
|
|
4860.
| மாகராய் உளோர் காப்பினை விடுகிலன் மற்றைப் பாக சாதனன் தன்னையும் அரும் சிறைப் படுப்பன் ஏக நாயகன் எய்தினும் எதிர்ந்து போர் புரிவன் ஆகையால் இனி இச் சிறு மொழிகளை அயர்த்தி. |
150 |
|
|
|
| |
|
|
|
|
|
4861.
|
உரைப்பது
என் இனி ஒரு வயிற்று என்னுடன் உதித்துப்
பெருக்கம் உற்றனை நம் குலப் பகைஞரைப் பெரிது நெருக்கல் இன்றியே அவர்கள் பால் பட்டனை நீயே இருக்க மற்று ஒரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே. |
151 |
|
|
|
| |
|
|
|
|
|
4862.
|
பத்துக் கொண்ட நூறு உடையதோர் சென்னியும் பலவாம்
கொத்துக் கொண்டு அமர் தோள்களும் கரங்களின் குழுவும்
எத்துக்கு ஆற்றினை வன்மையும் வீரமும் இழந்தாய்
பித்துக் கொண்டவர் தம்மினும் பேதைமை பிடித்தாய். |
152 |
|
|
|
| |
|
|
|
|
|
4863.
|
தானவர் வழிமுறை தன்னை விட்டனை
வானவர் போன்றனை வன்மை சிந்தினை மேல் நிகழ் திட்பமும் விறலும் மாண்டனை மோனமொடு அரும் தவம் முயலப் போதி நீ. |
153 |
|
|
|
| |
|
|
|
|
|
4864.
|
மறந்தனை இகழ்ந்தனை மான நீங்கினை
சிறந்திடும் அவுணர் தம் சீர்த்தி மாற்றிடப் பிறந்தனை ஈண்டு ஒரு பயனும் பெற்றிலை இறந்தனை போலும் நீ இருந்துளாய் கொலோ. |
154 |
|
|
|
| |
|
|
|
|
|
4865.
| மந்திரி ஆதியான் மற்று இதற்கு நீ சிந்தையில் வெருக் கொளின் திசை முகத்தர் போல் ஐந்தியல் அங்கம் ஒன்று அம் கை பற்றுதி வெம் திறலே எனப் படையும் வீசியே. |
155 |
|
|
|
| |
|
|
|
|
|
4866.
| கிளைத்திடு கள்ளியின் கிளை களாம் என வளர்த்தனை பல தலை வரம்பு இல் கைத்தலம் நெளித்தனை சுமந்தனை நெடிது காலமா இளைத்தனை வலி இலாய் யாது செய்தி நீ. |
156 |
|
|
|
| |
|
|
|
|
|
4867.
| பண்டு உணர்வு இல்லது ஓர் பருவம் ஆதலின் கண்டனை வருணனைத் தளையின் இட்டனை அண்டரை அலைத்தனை அறிவு கூடலின் பெண்டிரின் நடுங்கினை பேடி போலும் நீ. |
157 |
|
|
|
| |
|
|
|
|
|
4868.
| பல் நெடும் தலை உடைப் பாலன் ஆகும் முன் வன்மையும் ஆடலும் வந்து பார்த்திட இன்னமும் வந்திலள் வருந்தி ஈன்ற தாய் அன்னை தன் குறை கொலோ அருவ மானதே. |
158 |
|
|
|
| |
|
|
|
|
|
4869.
| பகை என ஒன்று உறில் பதை பதைத்து எழீஇச் சிகை உடை வால் உளைச் சீயம் சீறியே தகு விறல் கொள்ளும் ஆல் அவற்றின் தன்மை ஆய் மிகுதலை பெற்றதும் வீண் கொல் எம்பி நீ. |
159 |
|
|
|
| |
|
|
|
|
|
4870.
| பூதரைத் தலைவரைப் புராரி மைந்தனை ஏதிலர் யாரையும் யான் வென்று ஏகுவன் நீ தளர்வு எய்திடல் நினது மா நகர் போதுதி என்றனன் புலன் இல் புந்தியான். |
160 |
|
|
|
| |
|
|
|
|
|
4871.
| என்று இவை அவுணர் கோன் இசைத்த காலையின் நன்று இவன் உணர்வு என நகைத்துக் கண் தொறும் துன்றிய பேர் அழல் சொரிய வெம் சினத்து ஒன்றிய தன் உளத்து இனைய உன்னுவான். |
161 |
|
|
|
| |
|
|
|
|
|
4872.
|
உறுதியை
உரைத்தனன் உணர்வு இலாதவன்
வறிது எனை இகழ்ந்தனன் வருவது ஓர்கிலன் இறும் வகை நாடினன் யாது ஒர் புந்தியை அறிவு இலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர். |
162 |
|
|
|
| |
|
|
|
|
|
4873.
| உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும் கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன் சித்தம் அது உணர் வகை தெருட்டு கின்றதே. |
163 |
|
|
|
| |
|
|
|
|
|
4874.
| தொலைக்கரும் திருவுடைச் சூரன் புந்தியைக் கலக்கினும் உய்வகை கருது கின்றிலன் அலக்கண் உற்று இருந்து நாம் இரங்கி ஆவது என் விலக்கரும் விதியை யாம் வெல்ல வல்லமோ. |
164 |
|
|
|
| |
|
|
|
|
|
4875.
| ஆவது விதி எனின் அனைத்தும் ஆயிடும் போவது விதி எனின் எவையும் போகும் ஆல் தேவருக்கு ஆயினும் தீர்க்கத் தக்கதோ ஏவரும் அறி ஒணா ஈசற்கு அல்லதே. |
165 |
|
|
|
| |
|
|
|
|
|
4876.
| நீண்ட செம் சடை முடி நிமலன் ஈந்த நாள் மாண்டது மாய்ந்திடும் எல்லை வந்ததால் ஈண்டு உளார் யாவரும் இறையும் துஞ்சும் ஆல் பூண்டிடும் அமரர் கோன் தவமும் பொய்க்குமோ. |
166 |
|
|
|
| |
|
|
|
|
|
4877.
| இறப்பது சரத மேல் இறைவன் என் உரை வெறுத்தனன் இகழுமேல் வேண்டி இன்னும் யான் மறுத்து எதிர் மொழியலன் மன்ன என் பிழை பொறுத்தி என்று இன் உரை புகல்வது அல்லதே. |
167 |
|
|
|
| |
|
|
|
|
|
4878.
| மன்னவர் மன்னவன் வள்ளல் வேலினால் இன் இனி இறந்திடும் இதுவும் நோக்கியே பின்னும் இங்கு இருந்திடல் பிழையது ஆகும் ஆல் முன் உற முடிவதே முறை அதாம் எனா. |
168 |
|
|
|
| |
|
|
|
|
|
4879.
| சிந்தனை செய்திடு சிங்க மா முகன் தந்தையை நிகர் வரு தம் முன் தாள் தொழா வந்தனை செய்தனன் மன்ன சீறிடேல் புந்தி இலேன் பிழை பொறுத்தல் வேண்டும் ஆல். |
169 |
|
|
|
| |
|
|
|
|
|
4880.
| சிறியவர் ஒரு பிழை செய்யின் மேலவர் பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை இறை அதும் வெகுள்வரோ யானும் செய் பிழை அறிவன் நீ அன்றியே ஆர் அது ஆற்றுவார். |
170 |
|
|
|
| |
|
|
|
|
|
4881.
| பொறுத்தனை கோடி என் புன்மை உள்ள மேல் செறுத்து எனை இகழ்ந்திடல் செருவில் சென்றுயான் மறுத்து எதிர் மலைந்திடும் ஆற்றலார் தமை ஒறுத்திடு கின்றனன் அதனை ஓர்தி நீ. |
171 |
|
|
|
| |
|
|
|
|
|
4882.
| செருவினுக்கு ஏகுவன் செறுநர் தம்மிசைத் தருதி ஆல் விடை எனத் தம்பி கேட்டலும் பெரிது உளம் மகிழ்ந்தனன் பிறங்கு காதலால் வருதி என்று அனையனை மார்பில் புல்லினான். |
172 |
|
|
|
| |
|
|
|
|
|
4883.
|
பை
அரவு அளித்திடும் பாதலத்தினில்
வையக வரைப்பினில் திசையின் வான்களிற் செய்ய அண்டங்களில் செய்யும் வென்றி உள் ஐய நிற்கு ஏது கொல் அரியது ஆனதே. |
173 |
|
|
|
| |
|
|
|
|
|
4884.
| நீக்கம் இல் கேள்வியாய் நீ முன் சொற்றன தூக்கு உறின் என் மனத் துணிவும் திட்பமும் ஊக்கமும் உணரவே ஒன்னலார் எனும் மாக்களை அடுவது ஓர் மடங்கல் அல்லையோ. |
174 |
|
|
|
| |
|
|
|
|
|
4885.
| சென்றனர் மாற்றலர் என் கை தேர்தியேல் கொன்ற பின் அல்லது கும்பிட்டு ஓடிட வென்ற பின் அல்லது வெகுளி தீர்தியோ உன்றனது ஆற்றலை உணர்கிலேன் கொலோ. |
175 |
|
|
|
| |
|
|
|
|
|
4886.
| இற்றை நாள் நின் நகர் ஏகி ஆயிடை உற்றிடு படை எலாம் ஒருங்கு கொண்டு நீ கொற்றம் ஒடு இருக்குதி குமரன் ஈண்டு நின் மற்று உனை விளிக்குவன் வருதியால் என்றான். |
176 |
|
|
|
| |
|
|
|
|
|
4887.
|
ஒல் என முருகவேள் உனது மா நகர்
செல்லினும் ஏகலை செருவுக்கு அன்னது சொல்லினை விடுத்தி ஓர் தூதன் தன்னை யான் வல்லையின் அமர் செய வருகின்றேன் என்றான். |
177 |
|
|
|
| |
|
|
|
|
|
4888.
| என்றலும் அவுணருக்கு இறைவன் ஈங்கு இது நன்று என விடை அது நல்கத் தாழ்ந்து போய்த் தன் திருமா நகர் சார்ந்து வைகினான் வன் திறல் உடையது ஓர் மடங்கல் பேரினான். |
178 |
|
|
|
| |
|
|
|
|
|
4889.
| ஆனது ஓர் பொழுதினில் அரசன் ஆண்டு உறை தானை அம் தலைவரைத் தனயர் தங்களை ஏனையர் யாரையும் ஏகச் செய்து தன் மா நகர் இந்திர வளத்தின் வைகினான். |
179 |
|
|
|
| |
|
|
|
|
|
4890.
| அந்தம் இல் வளன் உடை அவுணர் காவலன் மந்திரம் இருந்தது வகுத்துக் கூறினாம் இந்திரன் முதலினோர் யாரும் ஏத்திடச் செந்தியின் அமர்ந்தவன் செய்கை செப்புவாம். |
180 |
|
|
|
| |
|
|