| 1090 | பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (4) |
|