முகப்பு
தொடக்கம்
1732
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை-
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்-
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே (6)