1914தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும்
      ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு
      எள்கி இவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று
      இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை உண்ட பின்னை இப்
      பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே            (8)