193செப்பு ஓது மென்முலையார்கள்
      சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய்
      அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப் போதும் வானவர் ஏத்தும்
      முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
      எம்பிரான் காப்பிட வாராய்             (3)