சொல்லின் தொகை கொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு-அறுசமயம்
வெல்லும் பரம இராமாநுச!-இது என் விண்ணப்பமே