703பையரவின் அணைப் பள்ளியினாய்
      பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
      வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும்
      செங்கனிவாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
      புள்ளுவம் பேசாதே போகு நம்பீ             (7)