886சூதனாய்க் கள்வனாகித்
      தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
      வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
      புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
      அழகன் ஊர் அரங்கம் அன்றே             (16)