890பாயும் நீர் அரங்கந் தன்னுள்
      பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
      மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
      துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
      அடியரோர்க்கு அகலல் ஆமே?             (20)