முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
|
| வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல் |
| 687 | தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே (1) | |
687
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 688 | கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே (2) | |
688
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 689 | மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்- பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்-வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே (3) | |
|
| |
|
|
| 690 | வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே (4) | |
690
பதிவிறக்கம் செய்ய
|
| |
|
|
| 691 | வெங்கண்-திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால் எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும் வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே (5) | |
|
| |
|
|
| 692 | செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே (6) | |
|
| |
|
|
| 693 | எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே (7) | |
|
| |
|
|
| 694 | தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து ஓடித் தொடுகடலே புக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல் மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே (8) | |
|
| |
|
|
| 695 | நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே (9) | |
|
| |
|
|
| 696 | வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும் மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்து கொற்ற வேல்-தானைக் குலசேகரன் சொன்ன நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே (10) | |
|
| |
|
|