இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவேங்கடம் 3 |
| 1037 | கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன் திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1) | |
|
| |
|
|
| 1038 | இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே (2) | |
|
| |
|
|
| 1039 | நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய் சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய ஆரா அமுதே அடியேற்கு அருளாயே (3) | |
|
| |
|
|
| 1040 | உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே (4) | |
|
| |
|
|
| 1041 | தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே (5) | |
|
| |
|
|
| 1042 | மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன் மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே (6) | |
|
| |
|
|
| 1043 | மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே (7) | |
|
| |
|
|
| 1044 | சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள் வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே (8) | |
|
| |
|
|
| 1045 | வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்- நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே (9) | |
|
| |
|
|
| 1046 | வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக் கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே (10) | |
|
| |
|
|