இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல் |
| 1921 | காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து போது மறுத்து புறமே வந்து நின்றீர்- ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (1) | |
|
| |
|
|
| 1922 | துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவர் ஆக முடித்து கலிக் கச்சுக் கட்டி சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்- இவர் ஆர்? இது என்? இது என்? இது என்னோ? (2) | |
|
| |
|
|
| 1923 | கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர் உருளச் சகடம்-அது உறுக்கி நிமிர்த்தீர் மருளைக்கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என்? இது என்? இது என்னோ? (3) | |
|
| |
|
|
| 1924 | நாமம் பலவும் உடை நாரண நம்பீ தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ? (4) | |
|
| |
|
|
| 1925 | சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்- எற்றுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (5) | |
|
| |
|
|
| 1926 | ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்- ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ? 6 | |
|
| |
|
|
| 1927 | மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்- எல்லே இது என்? இது என்? இது என்னோ? (7) | |
|
| |
|
|
| 1928 | புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் இக் காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்- எக்கே இது என்? இது என்? இது என்னோ? (8) | |
|
| |
|
|
| 1929 | ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப- ஏடி இது என்? இது என்? இது என்னோ? (9) | |
|
| |
|
|
| 1930 | அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார்-அவர் துக்கம் இலரே (10) | |
|
| |
|
|