நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல் |
| 3488 | கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1) | |
|
| |
|
|
| 3489 | நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? (2) | |
|
| |
|
|
| 3490 | கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் சேண்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே? (3) | |
|
| |
|
|
| 3491 | தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? (4) | |
|
| |
|
|
| 3492 | சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத் தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? (5) | |
|
| |
|
|
| 3493 | கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டு அங்கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டுமே? (6) | |
|
| |
|
|
| 3494 | கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே? (7) | |
|
| |
|
|
| 3495 | செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரி உரு ஆய் செய்த மாயம் அறிந்துமே? (8) | |
|
| |
|
|
| 3496 | மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9) | |
|
| |
|
|
| 3497 | வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின்கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10) | |
|
| |
|
|
| 3498 | தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூவுலகத்துள்ளே (11) | |
|
| |
|
|