பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்255

 

அடியார்கள் உரைப்ப - அடியவர்கள் வீண் பேச்சுப் பேசாது இத்தகைய திருவார்த்தைகளையே பேசுபவர் என்பது குறிப்பு. நாயனார் தில்லையை அடைந்து தரிசிக்கும் முன்பு பிள்ளையாரும் வந்து தரிசித்துச் சார்ந்தனர்; ஆதலின் அடியவர்கள் அதனை உரைத்தனர்போலும்.

விடையுயர்த்தார் - சிவம் பெருக்கி - என்பனவும் பாடங்கள்.

177

1443.

ஆழிவிட முண்டவரை யம்மைதிருப் பாலமுக
                                                      முண்ட போதே
யேழிசைவண் டமிழ்மாலை "யிவனெம்மா" னெனக்காட்டி
                                                      யியம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே யதிசயமாங்
                                                      காதல் கூர
வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த
                                                      விருப்பு வாய்ப்ப,

178

1444.

அப்பொழுதே யம்பலத்து ளாடுகின்ற கழல்வணங்கி
                                                      யருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டுவலங்
                                                      கொண்டு போந்தே
யெப்புவனங் களுநிறைந்த திருப்பதியி னெல்லையினை
                                                      யிறைஞ்சி யேத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை யூர்பணிந்து
                                                      பாடிச் செல்வார்,

179

1445.

தொண்டர்குழாம் புடைசூழத் தொழுதகரத் தொடுநீறு
                                                      துதைந்த கோலங்
கண்டவர்தம் மனங்கசிந்து கரைந்துருகுங் கருணைபுறம்
                                                      பொழிந்து காட்டத்
தெண்டிரைவாய்க் கண்மிதப்பி லுகைத்தேறுந் திருநாவுக்
                                                      கரசர் தாமும்
வண்டமிழா லெழுதுமறை மொழிந்தபிரான் றிருப்புகலி
                                                      மருங்கு சார்ந்தார்.

180

1443. (இ-ள்.) அம்மை திருப்பால் அமுதம் உண்டபோதே - அம்மையாருடைய திருமுலைப்பாலமுதத்தினை ஞானத்தோடும் உண்டருளிய அப்பொழுதே; ஏழ்இசை வண்தமிழ் மாலை - ஏழிசைகளும் பொருந்தும் வளப்பமுடைய தமிழ் மாலையினை; ஆழிவிடம் உண்டவரை "இவன் எம்மான்" எனக் காட்டி இயம்பவல்ல - கடல் விடத்தையுண்ட சிவபெருமானை "எமது பெம்மான் இவன்" என்று சுட்டிக்காட்டிப் பாடியருளவல்ல; காழிவரும் பெருந்தகைசீர் கேட்டதுமே - சீகாழியில் அவதரித்த பெருந்தகையாளராகிய திருஞானசம்பந்த பிள்ளையாருடை சிறப்புக்களைக் கேட்டவுடனே; அதிசயமாம் காதல் கூர - அதிசயமாகிய உணர்ச்சியுடன் எழுந்த காதல் கூர்ந்ததனாலே; வாழி அவர் ... விருப்பு வாய்ப்ப - வாழ்வு தரும் அவரது மலர்போன்ற திருப்பாதங்களை வணங்குதற்குத் தமது திருமனத்தில் எழுந்த விருப்பம் வாய்ப்ப,

178