பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்161

 

நமச்சிவாயத் திருப்பதிகம -பொது

திருச்சிற்றம்பலம்

பண் - காந்தார பஞ்சமம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணை திருந்தடி பொருந்தக்கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே.


பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ; யாவினுக் கருங்கல கருங்கல மரனஞ் சாடுதல்;
காவினுக் கருங்கலங் கோட்ட மில்லது; நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.


விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழ, லுண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


இடுக்கண்பட்டிருக்கினு மிரந்தியாரையும்,விடுக்கிற்பிரானென்று வினவுவோமல்லோ
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாழற்ற, நடுக்கத்தைக்கெடுப்பது நமச்சி வாயவே.


வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்; அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் ;
திங்களுக் கருங் திகழு நீண்முடி ; நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.


சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால், நலமில னாடொறு நல்கு வானலன் ;
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர், நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.


வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள், கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும், நாடினே னாடிற்று நமச்சி வாயவே.


இல்லக விளக்கது விருள் கெடுப்பது ; சொல்லக விளக்கது சோதி யுள்ளது ;
பல்லக விளக்கது பலருங் காண்பது ; நல்லக விளக்கது நமச்சி வாயவே.


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன், றன்னெறி யேசர ணாத றிண்ணமே,
யந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம், நன்னெறி யாவது நமச்சி வாயவே.


மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன், பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத், தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லியே .

திருச்சிற்றம்