பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்429

 

பொதுவான வினைத்தொகை. பிற்சரிதக் குறிப்புக் காண்க. இருந்து - முன் பாட்டில் இருந்தார் என்றடி இருந்து.

மாரிசுருங்கி - சுருங்கியதனால். வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது.

வளம் பொன்னி நதியும். உம்மை உயர்வுசிறப்பு. "எந்நாளும் பொய்யா தளிக்கும் புன"லுடைய தெனவும், "வான் பொய்யினுந் தான்பொய்யாக் காவிரி" எனவும் விதந்து பேசப்படும் உண்மை நீர்வளமுடைய அதுவும். பருவம் - நீர்பெருகுதற் குரியகாலம்; பயிர்க்கும் உயிர்க்கும் இன்றியமையாது பெருக நீர் வேண்டும் காலம். "நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்" (குறள்) என்றபடி மழைக்கு ஆதாரமாகிய கடலும் குன்றுமாயின், மாரியினால் ஆதரவு பெறும், ஊற்றும் குறைதல் ஒருதலை.

நீரின் இயன்ற உணவு அருகி - "ஏரினுழாஅ ருழவர்" என்று இதனைத் திருக்குறளுட் காரணங்காட்டி யுரைத்தமை காண்க. உணவு - இங்கு நெல் முதலிய உணவுக்குதவும் பண்டம் குறித்தது; ஆகுபெயர். நீரின் இயன்ற - நீரால் உளவாகும். இன் - விகுதி கருவிப் பொருள் தரும் ஆன் என்னும் மூன்றனுருபாய் வந்தது. இயன்ற - உளதாகும். "பசும்புற் றலைகாண் பரிது" என்றார் இதனைத் திருக்குறளாசிரியர். நிலவும் உணவினால் வாழும்; உலகில் வாழப்பெறும்.

பல மன் உயிர்களெல்லாம் - பல என்பது உயிர்களின் வகைகளையும், எல்லாம் - என்பது அவற்றின் தொகையையும் குறித்தன. முற்றும்மை தொக்கது.

இலம்பாடு - இலம் - இல்லாமை; பாடு - படுதல் - உண்டாதல். இல்லாமை உண்டாதல். படர் - துன்பம். துயரம். கூர்தல் - மிகுதல். படர்கூர் வறுமை - துன்பம் மிகும் பஞ்சம்.

உயிர்களெலாம் - படர்கூர் - என்றதுபற்றி "வானின் றுலகம் வழங்கி வருதலால் என்னும் திருக்குறட் கருத்துக் காண்க.

பாரின் - இன் - ஏழனுருபாகி வந்த உருபு மயக்கம். பாரில் வறுமை பரந்தது - என்று கூட்டுக.

வளர் பொன்னி - நீரினியன்றி - உணர்வுருகி - உயிர்க்கெல்லாம் - படர்ந்ததால் - என்பனவும் பாடங்கள்.

255

1521.

வைய மெங்கும் வற்கடமாய்ச் செல்ல, வுலகோர் வருத்தமுற
நையு நாளிற், பிள்ளையார் தமக்கு நாவுக் கரசருக்குங்
கையின் மானு மழுவுமுடன் காணக் கனவி லெழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலையுடையா ரருள்செய்வார்,

256

1522.

"கால நிலைமை யாலுங்கள் கருத்தில் வாட்ட முறீரெனினும்,
 ஏல வும்மை வழிபடுவார்க் களிக்க வளிக்கின் றோ"மென்று
 கோலங் காண வெழுந்தருளிக் குலவும் பெருமை யிருவருக்கும்
 ஞால மறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்.

257

1521.(இ-ள்.) வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல - உலகமெங்கும் பஞ்ச காலமாய் நிகழ; உலகோர் வருத்தம் உற - உலகத்து உயிர்கள் பசியால் வருந்த; நையும் நாளில் - துன்பப்பட்டு அலையும் நாளில்; செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் - சிவந்த சடையினை உடையாராகிய திருவீழிமிழலை உடைய நாயகர்; கையில் மானும் மழுவும் உடன்காண - தமது கைகளில் மானும் மழுவும் காணும்படியாக; பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் கனவில் எழுந்தருளி - ஆளுடைய பிள்ளையாருக்கும் அரசுகளுக்கும் கனவில் தோன்றி யருளி; அருள்செய்வார் - அருளிச் செய்வாராய்,

256

1522. (இ-ள்.) "கால நிலைமை.....அளிக்கின்றோம்" என்று "பஞ்சகாலமாகிய கால வேறுபாட்டின் நிலைமையினால் உங்கள் கருத்தில் வாட்டம் அடைய