பக்கம் எண் :


718திருத்தொண்டர் புராணம்

 

நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற்
பின்னேயப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னையொப் பாருள ரோ? சொல்லு வாழி யிறையவனே.

4

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு; மிறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

7

வானந் துளங்கிலென்? மண்கம்ப மாகிலென்? மால்வரையுந்
தானந் துளங்கிக் தலைதடு மாறிலென்? றண்கடலும்
மீனம் படிலென்? விரிசுடர் வீழிலென்? வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.

8

சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வெண்பிறை - வெண்ணீறு முதலாகிய எல்லாம் வெண்மையாய் விளங்குபவர் சிவபெருமான். நெஞ்சே! அவரது அடிமைக் கண்ணே துணிந்து நில். அவர் ஊழி முடிவில் பிரம விட்டுணுக்களும் இறந்தபின் கங்காள வேடத்துடன் உலகப் புனருற்பவத்தின் பொருட்டு வீணை வாசிப்பதாகிய நாதம் முடிக்குவர். அவருக்கு ஆட்பட்ட வுத்தமர் மலையும், வானமும், மண்ணும் துளங்கினாலும் அஞ்சார். பலகாலம் அழைத்தால் ஒருநாள் அவர்வெளிப்பட்டருளுவர். அவரைத்தொழு மவரைத் தேவராற்றொழுவிப்பர். இறைவரே! உம்மை நினைந்தே என் ஆவி கழியும்; அதன் பின் என்னை மறக்கப் பெறாய்! நான் உம்மை வேண்டுவது இதுவே. உம்மை மறந்திட்டும் உம்மால் மறக்கப்படாமல் உமக்கு எப்போதும் இனியனாய் இருக்கும் என்னை ஒப்பார் யாவர்? என்றிவ்வாறு இறைவரது அருளின் பெருமைகளையும் அடிமைப் பண்புகளையும் பலதிறப்பட எண்ணிப் போற்றியது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இப்பாட்டு முழுதும் இறைவரை வெண்மை பற்றிப் போற்றியது. வெண்மை - புகழ், தூய்மை முதலியவற்றுக் கறிகுறியாம். வெள்ளிப் பொடி - திருநீறு. பவளப் புறம் - பவளநிறமுடைய திருமேனியின் மேல். இப்பவளம் போன்ற செம்மை நிறம் பற்றியே மேல்வரும் பதிக முதற்பாட்டிற் போற்றியது காண்க. வேதியனே கபாலத்தன் - நூலன் என்று கூட்டி முடிக்க. - (2) உடலைத் துறந்து - பிறவியில் வாராது. உலகேழும் கடந்து - "உலகேழின் வருந்துயரும்" (1335). நெஞ்சே அடிமைக் கண்ணே துணி; உய்யப் போயிட லாகும். - (3) இது நாயனாரது பிரார்த்தனை. உலகங்கண்டுய்யும் பொருட்டு உபதேசித்தது. உன்னை நினைந்தே கழியுமென் ஆவி - உயிர்விடும் போது சிவனை நினைத்தல் வேண்டும்; அது கைகூட வேண்டுமாயின் எப்போதும் மறவாமல் நினைந்து பயிலவேண்டும். இக்கருத்துப்பற்றித் தொடர்ச்சியா யெழுந்தது மேல்வரும் திருப்பாட்டு. மறக்கப்பெறாய்! - மறவாதே! - மறவாதே! என்று கூறிய நாயனார் இறைவர் எஞ்ஞான்றும் மறவாமல் உயிர்களுக்கு அருள்புரியும் தன்மைபற்றி