பக்கம் எண் :


720திருத்தொண்டர் புராணம்

 

பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.

1

முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த
விருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தாற்
றருவா யெனக்குள் றிருவடிக் கீழொர் தலைமறைவே.

2

மூவா வுருவத்து முக்கண் முதல்வ!மீக் கூரிடும்பை
காவா" யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற்
றீயா யெரித்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.

3

துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே.

8

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப்
பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுங் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கட்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- முன் பதிகத்துக் குரைத்தபடி யுரைத்துக் கொள்க.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பவள நிறம்பற்றி இறைவரை எண்ணியது.- (2) பிணி.......நானுடையது - உடலை வீடாக உருவகம் பண்ணிக் கூறியது. நானுடையது - எனது உடைமை என்றும். நான் என்றும் ஆணவ மலத்தைச் சகசமாகவுடையது என்றும் உரைக்க நின்ற நயமும்; இது பிரிந்தால் - என்றது ஆணவ மலச்சத்தி மெலிந்தால் என்றும் இக்குடில் நீங்கி உயிர் துறந்தாலென்றும் உரைக்க நின்றதும், பிரிந்தால் திருவடிக்கீழோர் தலைமறைவு தருவாய் என்றது இவ் உடலாகிய வீடு விட்டால் உன் திருவடிக் கீழே ஒரு தலை மறையும் இடம் தா என்றும், ஆணவம் மெலிந்து விட்டபோதே நீ தருபவன் என்றும், தாள் - தலைபோல உயிர்த்தன்மை மறைய என்றும் உரைக்க நின்றதுமாகிய தொடர்நிலை உருவகமும் உள்ளுறைச் சுவையும் காண்க. திருவடிக்கீழ் தலைமறைவு - தாளிற்றலை யடங்கி நிற்றல் குறிப்பு. - (3) அடைந்தார்க்கு இறைவரது அருளிப்பாட்டின் விரைவினைச் சுவைபட எடுத்துக்காட்டியது. ஓர் - அனுபவம். ஒலி - ஒலி மாறியதில்லை - மணியெரித்த ஒலியின் எதிரொலி அடங்கவில்லை. - (4) முன்னாள் ஆட் செய்கிலாது விட்ட பாவம் இப்போது வந்து பிறவியில் மூண்டு வருத்துகின்றது. அதன் பொருட்டு வருந்துதல் மடமை. சமழ்ப்பது - வருந்துதல். என்னே - ஏன்! என்ன மடமை. நந்தி - சிவபெருமான் - (5) புந்திவட்டம் - நினைவின் சூழல். நந்தி வட்டம் - மலர். - (6) உன் மத்தக மலர் - ஊமத்தம். பல் மத்தகம் - பல்லையுடைய மண்டை ஓடு. என் மத்தகத்தே - எனது. தன் மத்தகம் - தனது சடைத்தலை. - (7) கோவணம் உடுத்துப் பலிதிரியும் நீர் எக்குடி வாழ்க்கை கருதிப் பாவையை மணந்தீர்? நகைச்சுவைபட வந்த இலேசவணி. உத்தமனே என்ற குறிப்புமது. - (8) துறக்கப்படாத - துறக்க இசையாத. வெந்தூதுவர் - இயமன் றூதர். விசும்பேறுவன் - பிறப்பன். புண்ணியத்துக்கீடாக விசும்பேறினும், அதன்