பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்723

 

கப்படும் பொருள். அத்தனை நினைந்த நெஞ்சும் அழகிதா நினைந்தவாறு - அத்தனை நினைந்த அளவே நெஞ்சத்தின் தொழில் அழகிதாம்; ஏனைய நினைப்புக்களை நினைந்தபோது அழகிற்கும் நேர்பாட்டிற்கும் மாறுபட்டது என்பதும் குறிப்பு. ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம்.- (2) முன்பன் - முதல்வன். அநாதியே யுள்ளவன். மூர்த்தி - தலைவன். வன் பனைத் தடக்கை - வலிய பனை போன்ற பெரிய கை. துதிக்கை. கருப்பனைத் தடக்கை வேழம் (6) என்றதுமிது. "பனைக்கை மும்மத வேழம்" (தேவா). - (3) பெரும் பொருட் கிளவியான் - பெரும் பொருளை எடுத்துகூறும் சொல்லுக்குடையவன். "பெரும் பெயர்க் கடவுள்" (சிவஞான போதம் - பாயிரம்). பெரும் பெயர் முருக!; பெரும் பெயரியவுள்! (திருமுருகு) பெரும் பெயர் - மகா வாக்கியம்.-(4) ஊர் - முப்புரம். - (5) அமுத யோக நீற்றன் - அமுதம் - வீடு. வீட்டினைத் தரும் திருநீறு. யோகம் - கூடுதல். - (6) வேழக் களிறு - இருபெயர் ஒட்டு. - (9) விண்ணிடை மின் - யோகத்திற் றோன்றும் மின். மின் ஒப்பான் - அந்தரியாகப் பூசையில் மின்னின் ஒளியுடையவராய்த் தியானித்துத் தலையுச்சியினின்றும் எடுத்து இதயத் தாமரைப் பீடத்தில் வைத்துப் பூசிக்கும் ஆகம விதி காண்க. மெய்ப் பெரும் பொருள் ஒப்பான் - மெய்ப்பொருளாவானை. இருட் சுடர் - மும்மலமாகிய இருளினடுவு விளக்கஞ் செய்யும் ஒளி. எண்ணிடை - எண்ணத்தினுள். எண்ணலாகா - எண்ணாத. இருவர் - பிரம விட்டுணுக்கள். - (10) உரவன் - அறிஞன். வலியன் என்றலுமாம். நிரவன் - அழிப்பவன்.

பொது - வினாவிடைத் திருத்தாண்டகம்

XVIதிருச்சிற்றம்பலம்

தாண்டகம்

அண்டங் கடந்த சுவடு முண்டோ? வனவலங்கை யேந்திய வாட லுண்டோ?
பண்டை யெழுவர் படியு முண்டோ? பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ?
கண்ட மிறையே கறுத்ததுண்டோ? கண்ணின்மேற்கண்ணொன்றுகண்டதுண்டோ?
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ? சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

விரையுண்டவெண்ணீறு தானுமுண்டு; வெண்டலைகை யுண்டொருகை வீணையுண்டு;
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு; சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு;
அரையுண்ட கோவண வாடை யுண்டு; வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு;
இரையுண் டறியாத பாம்புமுண்டு; இமையோர் பெருமா னிலாத தென்னே!

9

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையா னென்னி னல்லான்
ஒப்புடைய னல்ல னொருவ னல்ல னோரூர னல்லனோ ருவம னில்லி
யப்படியு மந்நிறமு மவ்வண் ணமு மவனருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியு னின்நிறத்த னிவ்வண் ணத்த னிவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே.

10

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்;
         புலித்தோ லுடைகண்டேன்; புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்;
         மிளிர்வதொரு பாம்பு மரைமேற் கண்டேன்;
அன்னத்தே ரூர்ந்த வரக்கன் றன்னை
         யலர வடர்த்திட்ட வடியுங் கண்டேன்;
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்;
         சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

11

திருச்சிற்றம்பலம்