பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்727

 

கொண்டுரைப்பார் இராமநாதச் செட்டியார். ஓடும் - எண்ணின்கண்வந்தன என்பர். இங்குச் "சொல்லால் வேறுபாடு உணர்ந்தாரே யல்லாமல்" என்றுரைப்பாருமுண்டு. துணிந்து இருந்த - இவ்வறிவினிடை ஊற்றி நிற்றல் ஏனையோர்க்கரிது என்பார் துணிந்து என்றார். இருந்த - அத்துணிபில் ஊன்றியிருத்தல்.

ஓடும் - இணையாக மாட்டாது தோல்வியுற்று ஓடும் என்றது குறிப்பு.

வில் ஓடும் நுதல் - புருவங்கள் வில்போன் றிருத்தலானும் வில் ஓடும் எனப்பட்டது. "செருவெழும் தனுவதொன்றும் சேமவில் ஒன்றுமாக" (திருஞான - புரா - 1097) உருவகம். வில் ஓடும் - என்றது புருவங்கள் வளைந்தும் நிமிர்ந்தும் அசைவு காட்டுதலை. "பொருகயற் கண்புடை பெயர" (1685) ஆடுவாராதலின் கண் பெயர்தலுக் கேற்பப் புருவங்கள் ஓடும் தன்மை படைத்தன என்க. ஓடும் - உவம உருபு.

விசும்பூடு - விசும்பினின்றும்; விண்ணுலகினின்றும். இவர்கள் தெய்வ அரம்பையர்.

இழிந்தார் - இறங்கி வந்தனர். தஞ்செயல் நாயனார்பாற் செலுத்தமாட்டாது "யாது மொரு செயலில்லாமையி லிறைஞ்சி" (1689) அகல்வார் என்றதும் குறிப்பு.

418

1684.

வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தா லெனவந்து
தானநிறை சுருதிகளிற் றகுமலங்கா ரத்தன்மை
கானவமு தம்பரக்குங் கனிவாயி லொளிபரப்பப்
பானனெடுங் கண்கள்வெளி பரப்பியிசை பாடுவார்;

419

1685.

கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய
வுற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப்
பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர
வற்புதப்பொற் கொடிநுடங்கி யாடுவபோ லாடுவார்;

420

1686.

ஆடுவார்; பாடுவா; ரலர்மாரி மேற்பொழிவார்;
கூடுவார் போன்றணைவார்; குழலவிழ விடைநுடங்க
வோடுவார்; மாரவே ளுடன்மீள்வ; ரொளிபெருக
நீடுவார் துகிலசைய நிற்பாரு மாயினார்.

421

1684. (இ-ள்.) வானகம்.......என வந்து - ஆகாயத்தினின்றும் மின்னற்கொடிகள் வந்து கீழிறங்கியனபோல வந்து; தானநிறை......தன்மை - உரிய தானங்களினின்று நிறைந்து வரும் சுருதிகளினால் உண்டாகும் தக்க இனிமையுடனே; கான அமுதம்......பரப்ப - இசையமுதத்தினைப் பரவச் செய்கின்ற கொவ்வைக் கனி போன்ற வாயினிடத்து ஒளி விளங்க; பானல்..........பரப்பி - நீலமலர் போன்ற நெடிய கண்களை வெளியிற் பரப்பி; இசை பாடுவார் - இவ்வாறு இசையினைப் பாடுவாராகி,

419

1685. (இ-ள்.) கற்பகம்......செய்ய - கற்பக மரத்தின் இளந்தளிர்கள் போன்ற அடிகள், செல்கின்ற அழகிய சாரிகை செய்யவும்; உற்பலம்........பெயர - செங்கழுநீர் மலரரும்போல மெல்லியனவாய விரல்களினால் வர்த்தனையோடு சுழற்றிக் கைகள் பெயரவும்; பொற்புறும் அக் கையின்வழி - அழகு பொருந்தும் அக் கைகளின் வழியே; பொரு.......பெயர - பொருகின்ற கயல் மீன் போலும் கண்கள் புடை பெயர்ந்து செல்லவும்; அற்புதம்.......போல் - அற்புதமுடைய பொன்னாலாகிய கொடிகள் ஒசிந்து ஆடுகின்றவைபோல; ஆடுவார் - ஆடுவார்களாகி,

420