| அணியார் | 1545- | அணிமையில் உள்ளவர் |
| அடையாளக் குறிகள் | 1562- | |
| அதிகரித்தல் | 1316- | மிகப் பயிலுதல் |
| அத்தம் | 1623- | காடு |
| அமுத ஞானம் | 1448- | இறப்பைத் தவிர்க்கும் ஞானம் - சிவஞானம் |
| அம்பர தலம் | 1429- | வானவெளி |
| அல்லாகும் பொழுது | 1322- | இரவு |
| அவம் புரிதல் | 1338- | தகாதவை செய்தல் |
| அற்றவுணர்வு | 1485- | வேறொன்றிற் செல்லுதல் தவிர்ந்த உணர்ச்சி - தன் உணர்வு அற்றநிலை என்றலுமாம் |
| ஆடி | 1274- | கண்ணாடி |
| ஆதரவு | 1554- | அன்பு |
| ஆழிவலவன் | 1515- | ஆழி - சக்கரம்; சக்கர மேந்திய திருமால். ஆழி - கடல் என்று கொண்டு கடலரசன் என்றலுமாம் |
| இக்கு | 1423- | கரும்பு |
| இடருழத்தல் | 1474- | மனம் வருந்துதல் |
| இலச்சினை | 1415- | முத்திரை - குறி - அடையாளம் |
| 1418- | |
| இலம்பாடு | 1520- | பொருள்கள் இல்லாமை |
| இளநிலா | 1441- | பிறை |
| இறை வழுவுதல் | 1314- | சிறிது தவறுதல் |
| இறைகொள்ளப் பெற்ற | 1467- | விடைதரப் பெற்ற; இறை பெரியோரிடமிருந்துவரும் விடை. "இறை நல்குமின்" (திருஞான - தேவாரம் கொல்லி - கண்டியூர்) |
| உடனாகுதல் | 1508- | வேறுமன்றி - ஒன்றுமன்றி - உடனாயிருக்கும் கலப்பு |
| உரன் | 1666- | மனத் திண்மை |
| உறைப்பு | 1390- | உறுதி |
| ஊட்டுவான் | 1320- | சமயல் செய்தளிக்கும் ஏவலாளன் |
| எண் பெருகுதல் | 1658- | மன மூறிப் பொங்குதல் |
| 1665- | |
| எதிர்செய் குறை | 1338- | கைம்மாறு |
| ஒக்கல் | 1281- | சுற்றம் |
| ஒருப்படுதல் | 1495- | மனமொன்றித் துணிதல் |
| கடன் கழித்தல் | 1296- | கடமையைச் செலுத்துதல் |
| கடற்கொழுந்து | 1439- | கடலலையின் நுனி |
| கடை காவலுடையார் | 1352- | வாயில் காப்போர் |
| கட்டழித்தல் | 1656- | நிலை குலையச்செய்தல் |
| கரண்டம் | 1498- | நீர்க் காக்கை |
| கருநாமம் | 1599- | பிறவியில் வரும் பெயர் - பிறவியச்சம் என்றலுமாம் |
| களங்கொள் | 1602- | கழுத்தினடியாகப் பிறக்கும் |
| காலங்கள் | 1491 - 1504- | இறைவரது பாரார்த்த பூசைக்குரிய காலங்கள் |
| காலம் தவறு | 1527- | காலத்தால் நேரும் வறுமை |
| குமைத்தல் | 1459- | அழித்தல் |
| குறி | 1624- | கொள்கை |
| குறி | 1624- | குறிக்கோள் - இலட்சியம் |
| குறிப்பு | 1629- | கருத்து ஊன்றிய பொருள் |
| குறைகொள்ளுதல் | 1467- | விண்ணப்பித்தல் |
| குறைந்தடைதல் | 1310- | |
| குறைவறுத்தல் | 1512- | வேண்டுவன எல்லாம் செய்து தருதல் - எதனாலும் குறையில தாகச் செய்தல் |
| கூவல் | 1466- | கிணறு |
| கைக்குலவரை | 1378- | யானை |
| கைதவம் | 1689- | கீழ்மைச் செயல் |
| கோள் | 1329- | நற்கொள்கை |
| சமய லங்கனம் | 1348- | சமய நீக்கம் |
| சழக்கு | 1551- | குற்றம் |
| சாரிகை | 1685- | |
| சிவம் | 1427- | சிவத்தன்மை - செம்மை; மங்கலம் என்றலு மாம் |
| 1442- | |
| 1448- | |
| சீர்ப்பாடு | 1276- | சிறப்பு |
| சுருதி | 1684- | சுதி என்ப. நூல் என்றலுமாம் |
| செந்நெறி | 1306- | சிவநெறி |
| செவ்வி | 1545- | சமயம் - உரியகாலம் |
| ஞிமிறு | 1270- | வண்டு |