பக்கம் எண் :

8பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு

(17)சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை
வைவதொப்ப வயிணவரிற்சிலர்
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.

(23)திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தணன்
கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(24)வளங்குலாந் துறைமங்கலவாசன்போல்
உளங்கனன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. "