பக்கம் எண் :

136ஆத்மாநாம் படைப்புகள்

சாளரம்

இருளையே பார்த்துப் பார்த்து வந்த
கண்கள்
இருண்டு பெருத்து
வறண்டுவிட்டன
ஒரு சின்ன ஒளிக்கீற்று
வந்தாலும்கூட
பெருந்தவம் செய்து கிடைத்த வரமாய்
அலைபாயத் துவங்கின
ஒரு கணத்தின் கணமெனத்
தோன்றிய ஒளிக்கீற்று
சலிப்புற்று
உன் அகோரப் பசிக்கு
என்னை உணவாக்காதே
எனப் பதுங்கிச் சென்றது
எங்கு தேடியும்
கிடைக்காத ஒளிக்கீற்றை எண்ணி
உள் ஆழம் எங்கும்
தேடத் துவங்கிற்று

அற்பக் கண்
காரிருளை எதிர்கொண்டு
வெளி இருளே மேலென்று
வெளிப்பரப்பில்
ஆயத்துவங்கிற்று
அண்டத்தின் ஏதோ ஒரு மூலையில்
பதுங்கிக் கிடந்த ஒளிக்கீற்றின்
கனவுச் சாபத்தால்
உடம்பெல்லாம் கண்ணாகி