பக்கம் எண் :

150ஆத்மாநாம் படைப்புகள்

கவிதை

காலியாய் இருக்கும் கொட்டகை
நாற்காலிகள் போல் அமர்ந்து
கேட்கின்ற மக்கள் கூட்டம்
தலைவர் பேச்சை மெய்ம்மறந்து

வாங்கும் சக்தி இல்லை உம்மிடம்
கொடுக்கும் சக்தி இல்லை எம்மிடம்
பேச்சின் சக்தி தெரியும் அவ்விடம்
எழுத்தின் சக்தி தெரியும் அவ்விடம்

சட்டம் தீட்டும் அவன் கையைக்
கட்ட எத்தனை நாள் ஆகும்
சங்கிலிகள் சிறைச்சாலைகள் எவற்...

செருப்புச் சத்தம் கூச்சல் குழப்பம்
சின்னாபின்னம் மீண்டும் காலியாய்