ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு |