சும்மாவுக்காக ஒரு கவிதை உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள் நீங்கள் யாரென்று சொல்லுகிறேன் என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன் நீங்கள் யாரென்று சொல்லுங்கள் உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன் முழித்த முழி முழியையே முழுங்கும் போல நீங்கள் யாரானால் என்ன நான் யாரானால் என்ன அனாவசியக் கேள்விகள் அனாவசிய பதில்கள் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள் |