விடியலில் ஒரு கவிதை அந்த மாபெரும் பனிக்கட்டியின் ஒரு முனையை உடைத்தாகிவிட்டது நண்பர்காள் நாம் அதனை முழுவதும் உடைக்க வேண்டும் உலகத்தின் மிக உயர்ந்த புள்ளி எவரெஸ்டில் இருப்பினும் நமக்குத் தேவையான அளவு சமவெளியை நாம்தானே உருவாக்க வேண்டும் நமக்குள் எதற்கு உருகிக்கொண்டிருந்தும் திடமாய் உள்ள பனிக்கட்டி அதன் இரு முனையில் நாம் இருந்தாலும் நம் உருவம் நிழலாய் ஏன் இருக்க வேண்டும் ஒரு முனையை நான் உடைக்க மறுமுனையை நீங்கள் உடையுங்கள் சமவெளியில் உறுதியாய்க் கைகுலுக்கி உட்பரிமாற்றம் துவக்குவோம் அமைதிப்பறவை சிறகடித்துப் பறக்கட்டும் நம் பார்வை நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சி பரவட்டும் சொல்லத் தகுமோ இதுதான் வாழ்க்கை என |