ஒரு கவிதை எனும் ஒரு கவிதை என் கையெழுத்தை இழந்த ஒரு நாள் போலியாய் என் மனம் காலியானது சுற்றிலுமிருந்த வெட்டவெளிச்சம் எனை ஆட்கொண்டது ஒருவரும் அனுதாபத்துடன் அணுகவில்லை காலை மாலை இரவு எல்லாம் நன்கு தெரிந்தன ஒரே பாதையில் சுழலத் துவங்கினேன் எல்லையற்ற பெருவெளியில் போலி மனம் அவ்வப்போது சில முட்டைகள் உடைந்தன என்னளவில் ஆகாயம் எனக்குள் ஊஞ்சலில் திருகாணியாய் வலம் வந்து சுமந்தேன் விட்டத்தைக் கால் மேல் |